மக்களே அலர்ட்! 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு..சென்னையிலும் மழை பெய்யுமாம்..வானிலை மையம்
டெல்லி: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், கோவை நீலகிரி, தேனி, திருப்பூர், திண்டுக்கல், செங்கல்பட்டு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 15 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேபோல் சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications