Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது! கனமழை வார்னிங் பட்டியலில் டெல்டா மாவட்டங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சமீப நாட்களாகவே தமிழ்நாட்டில் கனமழை வெளுத்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும் இதன் காரணமாக நாளை முதல் மீண்டும் கனமழை தொடங்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அக்டோபர் 1ம் தேதி தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று தொடங்கி டிச.15ம் தேதி வரை தமிழகம் இயல்பை விட 30% கூடுதலான மழையை பெற்றிருக்கிறது. அதாவது வழக்கமாக இந்த நாட்களில் 410.3 மி.மீ அளவுக்குதான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 564.6 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியானது, இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்றும், இது வலுவடைந்து புயலாக மாறுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

tamil nadu rains

இதன் காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் கனமழை தொடங்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அதாவது, "இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாகப்பட்டினம், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.18ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், புதுவையில் கன முதல் மிக கனமழையும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிபேட்டை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், காரைக்கால் பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.19ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிச.20ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+