8 மாவட்டங்களில் கனமழை.. நாளை பள்ளி மாணவர்களுக்கு அலர்ட்.. குடை, ரெயின் கோட் எடுத்துக்கோங்க!
சென்னை: தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், நாளை பள்ளி மாணவர்களுக்கு மழையின் அளவை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை மழை பெய்யவில்லை என்றாலும், மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட் ஆகியவற்றுடன் பள்ளிக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
அண்மையில் டிட்வா புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குறிப்பாக அரையாண்டு தேர்வு நெருங்கிவிட்ட சூழலில், பள்ளிகளுக்கு மழையால் தொடர்ந்து விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் 3 நாட்களுக்கும் மேலாக விடுமுறை அளிக்கப்பட்டன. தற்போது டிட்வா புயல் வலுவிழந்த சூழலில், தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் மட்டும் மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக டிசம்பர் 9 முதல் 13 வரை மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 10 முதல் 13 வரை தமிழ்நாட்டின் ஓரிரு மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டௌள்ளது. அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, குமரி, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை இரவு முழுக்க தொடரும் பட்சத்தில், நாளை இந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மழையின் அளவை பொறுத்து விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அப்படி இல்லையென்றால், மாணவர்கள் குடை மற்றும் ரெயின் கோட்டுடன் பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications