வெளுத்து வாங்கும் கனமழை.. திருப்பூர், கோவையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு லீவ்.. மாவட்ட ஆட்சியர்கள்
கோவை: கோவையில் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதேபோல் திருப்பூரிலும் இன்று (புதன்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திருப்பூர், கோவையில் இன்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதாலும் மழை நேற்று நள்ளிரவு வரை பெய்ததாலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. பருவமழை துவக்கத்தில் இருந்தே நல்ல மழை பெய்து வருகிறது. பருவமழை ஆரம்பிக்கும் போதே சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. தற்போது, உள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக கோவை, திருப்பூரில் கனமழை வெளுத்து வாங்கியது.
நேற்று மாலையில் கோவை, ஈரோடு, திருப்பூர், தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. தென்காசியில் சங்கரன்கோவில், ஆலங்குளம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. கோவையில் பல்வேறு இடங்களில் மழையின் காரணமாக வெள்ளம் தேங்கி நிற்கிறது. தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதான வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.
குறிப்பாக கோவையில் நேற்று காலையில் இருந்தே பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் கோவையில் இன்றும் புதன்கிழமையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை கருதி இன்று புதன்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
கோவையில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார். இதேபோன்று திருப்பூரிலும் கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் அம்மாவட்ட ஆட்சியரும், இன்று புதன்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார். தொடர்ந்து கனமழை விடாமல் பெய்து வருவதாலும், நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அம்மாவட்ட ஆட்சியர் கிற்ஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications