Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தென் மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று நெல்லை, தென்காசி, குமரி ஆகிய 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது வரை வடகிழக்கு பருவமழை எவ்வளவு பெய்துள்ளது என்ற தகவலையும் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. நேற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. குறிப்பாக நேற்று மாலை வேளையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதையடுத்து தொடர்ந்து இன்று நெல்லை, தென்காசியில் மழை கொட்டி வருகிறது.

rain weather chennai

கூடுதலாக 33 சதவிகிதம் மழை

நேற்று மாலை பெய்ய தொடங்கிய மழை இரவும் ஒருசில இடங்களில் விட்டு விட்டு பெய்தது. அதிகாலையில் சிறிது நின்ற மழை, பின்னர் மீண்டும் விட்டு விட்டு பெய்ய தொடங்கியது. மதியம் 1.30 மணியளவில் மழை பரவலாக பெய்ய தொடங்கியது. பாபநாசம், கடையம், அம்பை, ஆலங்குளம், முக்கூடல், பாப்பாகுடி என பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி வருகிறது. இந்த நிலையில் இன்று நெல்லை, தென்காசி, குமரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 33 சதவிகிதம் கூடுதலாக பெய்துள்ளது. தமிழகத்தில் அக்டோபர் 1 முதல் தற்போது வரை 59 செமீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயல்பை விட 86 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. வழக்கத்தை விட 8 சதவிகிதம் குறைவாக தூத்துக்குடியில் மழை பதிவாகியுள்ளது.

இதேபோன்று சென்னையை எடுத்துக்கொண்டால், இயல்பை விட 33 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. சென்னையில் வழக்கமான 81 செமீ மழைக்கு பதிலாக 108 செமீ மழை பெய்துள்ளது. தமிழகத்தில் இன்று தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, குமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் பனிமூட்டம் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரம்

வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- ”பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வடதமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஒரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

01-01-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். 02-01-2025 முதல் 06-01-2025 வரை: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் எப்படி?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப்பகுதிகள்: 31-12-2024 முதல் 04-01-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்: 31-12-2024: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல், இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01-01-2025: இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 02-01-2025 மற்றும் 04-01-2025: எச்சரிக்கை ஏதுமில்லை.

அரபிக்கடல் பகுதிகள்: 31-12-2024: எச்சரிக்கை ஏதுமில்லை. 01-01-2025: குமரிக்கடல் பகுதிகளை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

02-01-2025: மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 03-01-2025 மற்றும் 04-01-2025: தென்கிழக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+