வானம் வெடித்து சிதறியது போல ஒரே நாளில் ஒரு வருஷத்து 93 செ.மீ. மழை! கதி கலங்கிப் போனதே காயல்பட்டினம்!
காயல்பட்டினம்: தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தமிழ்நாட்டின் வரலாறு காணாத வகையில் ஒரே நாளில் 93 செ.மீ மழை வெளுத்து கொட்டியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
குமரிக் கடலில் நிலை கொண்ட வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை வெள்ளத்தைக் கொட்டித் தீர்த்துவிட்டது. தமிழ்நாட்டின் வரலாறு காணாத வகையில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை கதிகலங்க வைத்திருக்கிறது ஒரே நாளில் கொட்டித் தீர்த்த 93 செ.மீ. மழை.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் 50 செ.மீ. மழை பல வாரங்களாக தத்தளிக்க வைத்துள்ள நிலையில் காயல்பட்டினம் எப்படி 93 செ.மீ மழையை தாங்க முடியும் என்பதுதான் அனைவரது கேள்வியாக இருக்கிறது.
காயல்பட்டினமானது கடலுக்கு மிக அருகில் இருக்கக் கூடிய நகரம்தான். ஆனால் 60க்கும் மேற்பட்ட பெரிய குளங்களைக் கொண்ட நகரமாக உருவாகி இருந்தது. இன்னொரு பக்கம் காயல்பட்டினத்தின் வீடுகள் கட்டமைப்பானது பெருமளவு நீர் வெளியேறக் கூடிய சாத்தியமற்ற கட்டமைப்புகளையும் கொண்டது. அண்மைக்காலமாக குளங்களை காவு கொண்ட இதர பகுதிகளைப் போல காயல்பட்டினமும் உருமாறிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில்தான் ஒரே நாளில் 93 செ.மீ மழை வெளுத்தெடுத்து காயல்பட்டினத்தை கதிகலங்க வைத்துள்ளது. காயல்பட்டினத்தில் பெரும்பாலான வீடுகளின் தரைத்தளம் மூழ்கிக் கிடக்கின்றன. என்னதான் குளங்கள் நிரம்பி வழிந்தாலும் என்னதான் கடலுக்கு அருகே இருந்தாலும் குடியிருப்புகள் அத்தனையும் பெருமழை வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
காயல்பட்டினத்தில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில்தான் புன்னைக்காயல் உள்ளது. இங்குதான் தற்போது 1 லட்சம் கன அடிநீரோடு பாய்ந்து வரும் தாமிரபரணி நதி கடலில் கலக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications