வடசென்னையில் வானிலிருந்து கொட்டிய வாட்டர்ஃபால்ஸ்! ஆகஸ்ட் மாதத்தில் இப்படி நடந்ததே இல்லை! வெதர்மேன்
சென்னை: வடசென்னையில் நள்ளிரவு பெய்த மழை மேகவெடிப்பு மழை என்றும் ஆகஸ்ட் மாதம் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த மழையை கொடுத்துள்ளது என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு வரலாற்றுச் சிறப்புவாய்ந்த ஆகஸ்ட்டாக இது உள்ளது. இந்த ஒரே மாதத்தில் 3 முதல் 100 மி.மீ. மழை பெய்துள்ளது. ஒரே மாதத்தில் அதிலும் ஆகஸ்ட் 22, 23, 31 ஆகிய தினங்களில் பெய்த மழையால் முதல்முறையாக இந்த சாதனை படைத்துள்ளது.

இது போன்றதொரு மழை சென்னையில் ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை பதிவானதில்லை. வடசென்னையில் இன்று பெய்த மழை, மேகவெடிப்பு மழையை போல் இருந்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதாவது காலை 8.30 மணி நிலவரப்படி வடசென்னை முழுக்க வானில் இருந்து நீர் வீழ்ச்சி கொட்டியது போல் இருந்தது என குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
மேகவெடிப்பு
இந்திய வானிலை மையத்தின் கூற்றுப்படி, ஒரு மணி நேரத்தில் ஒரு சிறிய பகுதியில் அதாவது 20 முதல் 30 சதுர கி.மீ. பரப்பில் 100 மி.மீ. மழை பெய்தால் அது மேகவெடிப்பு ஆகும். எனவே வடசென்னையிலும் இது போன்ற சம்பவம் நடந்ததால், இதுவும் மேகவெடிப்பு மழைதான்.
140 மி.மீ. மழை
சென்னையில் ஆகஸ்ட் மாதம் இயல்பான மழையின் அளவு 140 மி.மீ. ஆகும். நுங்கம்பாக்கத்தில் இந்த மாதம் மட்டுமே 200 மி.மீ. மழை பெய்துள்ளது. ஆகஸ்ட் மாதம் சென்னை மழை வரலாற்றில் முக்கிய இடம் பிடித்திருக்கிறது.
கொரட்டூரில் கொட்டிய மழை
ஆகஸ்ட் 30 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை 8.30 வரை சென்னையில் பல்வேறு இடங்களில் பதிவான மழையை பார்க்கலாம். கொரட்டூரில் 182.4 மி.மீ., மணலியில் 158.8, கத்திவாக்கத்தில் 136.5, திருவொற்றியூரில் 126, அயப்பாக்கத்தில் 121.8 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
பாரிமுனையில் எவ்வளவு மழை
பாரிமுனையில் 115.5 மி.மீ. மழையும், அம்பத்தூரில் 112.2 மி.மீ. மழையும், நெற்குன்றத்தில் 110.4 மி.மீ., தண்டையார்பேட்டையில் 102.4 மி.மீ., கொளத்தூரில் 96.6, அயனாவரத்தில் 96, காசிமேட்டில் 95.1. மி.மீ, வளசரவாக்கத்தில் 91.2 மி.மீ. மழையும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 81.9 மி.மீ., பெரம்பூரில் 81.2, அமைந்தகரையில் 79.2, அண்ணாநகர் மேற்கில் 75.6, ஒக்கியம் துரைப்பாக்கத்தில் 73.2, மத்திய சென்னையில் 63.6 மி.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இரு நாளாக மழை
கடந்த இரு தினங்களாக தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக வால்பாறை, நெல்லை, குமரி, ஈரோடு, தேனி, நீலகிரி, மன்னார்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
மழை ஏன்
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 31-08-2025 முதல் 01-09-2025 வரை:தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
வரும் வாரம் எப்படி
02-09-2025 முதல் 05-09-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications