Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"சம்மர்" முடிந்தது என சந்தோஷம் வேண்டாம்! பெரிய பிரச்சனை இருக்கு! அப்போ இந்தியாவுக்கு என்ன! அலர்ட்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: இந்தாண்டு கோடை வெப்பத்தில் இருந்து எஸ்கேப் ஆகவே பலரும் சிரமப்பட்ட நிலையில், இந்த ஓவர் வெப்பம் என்பது வரும் காலத்திலும் தொடரும் என்ற அலர்டை உலக வானிலை மையம் கொடுத்துள்ளது.

வழக்கத்தைக் காட்டிலும் இந்தாண்டு வெப்பம் அதிகமாக இருந்ததை நீங்கள் உணர்ந்து இருக்கலாம். இந்தாண்டு கோடைக் காலம் தான் முடிந்துவிட்டதே என்று நீங்கள் ஜாலியாக இருக்க முடியாது. ஏனென்றால் இந்த ஓவர் வெப்பம் என்பது இந்தாண்டு மட்டும் இருக்காதாம்.

 How hot will 2023 end up to be new warning from World Meteorological Organisation

இந்தாண்டு கோடை காலம் முடிந்தாலும் கூட அடுத்து வரும் ஆண்டுகளிலும் வெப்பம் அதிகமாகவே இருக்குமாம். இது தொடர்பாக உலக வானிலை அமைப்பு சில முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

வெப்பம்: பருவநிலை மாற்றம் தொடர்பான உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட முக்கிய ஒப்பந்தமாகக் கருதப்படும் பாரிஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பு மீறுமோ என்பதே இப்போது பலரது கேள்வியாக இருக்கிறது. இதற்கான பதில் நாசா சமீபத்தில் வெளியிட்டுள்ள டேட்டாவில் இருக்கிறது. கடந்த 1880க்கு பிறகு இருப்பதிலேயே வெப்பமான ஒரு மாதமாக ஜூலை மாதம் இருக்கிறது.

கடந்த 1951 முதல் 1980 வரையிலான ஆண்டுகளில் ஜூலை மாதம் பதிவான சராசரி வெப்பத்தைக் காட்டிலும் இந்தாண்டு ஜூலை மாதம் 1.18 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாகப் பதிவாகியிருக்கிறது.

5 ஆண்டுகள்: இந்தாண்டு அதாவது 2023 முதல் 2027க்கு இடையே சராசரி உலக வெப்பம் என்பது குறைந்தபட்சம் ஒரு ஆண்டாவது தொழில் புரட்சிக்கு முந்தைய நிலைகளை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று உலக வானிலை அமைப்பு கணித்துள்ளது. அடுத்து வரும் 5 ஆண்டுகளில் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு இதுவரை பதிவானதிலேயே வெப்பமான ஆண்டாக இருக்கும். அதேபோல அடுத்து வரும் 5 ஆண்டுகளும் வெப்பமானதாக இருக்க 98% வாய்ப்பு இருக்கிறது.

அதேநேரம் அடுத்து வரும் அனைத்து ஆண்டுகளும் வெப்பமானதாக இருக்கும் எனச் சொல்ல முடியாது என்கிறது உலக வானிலை அமைப்பு. பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வெப்பம் வரம்பு என்பது நிரந்தரமாக இந்த 1.5 டிகிரி செல்சியஸை தாண்டினால் தான் ஆபத்து எனக் கூறியுள்ளது. ஆனால், தற்போது இருக்கும் டேட்டாக்களை வைத்துப் பார்க்கும் போது எப்போதும் ஆபத்து இருக்கும் எனச் சொல்ல முடியாது.

இருப்பினும், ஜூலை மற்றும் கோடைக் காலங்களில் வெப்பம் அதீதமாக இருப்பது நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கலாம். மேலும், ஜூன் மாதத்தின் முதல் சில நாட்களில் பதிவான உலகின் சராசரி வெப்பம் என்பது தொழில்துறைக்கு முந்தைய (1850-1900) காலத்தில் பதிவான சராசரியை விட 1.5 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது, இத்தனை ஆண்டுகளில் கோடைக் காலத்தில் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாகப் பதிவானதே இல்லை என்கிறது ஐரோப்பிய வானிலை மையம்.

ஏன் முக்கியம்: கடந்த காலங்களிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாட்கள் உலகின் சராசரி வெப்பம் என்பது இந்த 1.5 டிகிரி செல்சியஸ் வரம்பைத் தாண்டியுள்ளன. இருப்பினும், அவை டிசம்பர்-ஏப்ரல் காலத்தில் மட்டுமே ஏற்பட்டது. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், இந்த முறை ஜூலை மாதமே வெப்பம் அதிகரித்துள்ளது. மேலும், ஓரிரு நாட்கள் மட்டுமின்றி தொடர்ச்சியாக சில நாட்கள் வெப்பம் அதிகரித்துள்ளது.

இதனால் இந்த ஜூலை மாதம் அதிகரித்த வெப்பம் என்பது வெறும் அதிகபட்ச வெப்பமாக மட்டும் இருக்காது. மாறாக இந்தாண்டு பதிவாகும் வெப்பம் முதல்முறையாக பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அந்த 1.5 டிகிரி செல்சியஸ் மார்க்கை தாண்டும் ஆண்டாகவும் இருக்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த ஓவர் வெப்பம் என்பது இந்தாண்டுடன் முடியாது அடுத்த சில ஆண்டுகளுக்கும் தொடர வாய்ப்பு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+