ஒரே இடத்தில் குவியும் மேகம்.. ஆஃபிஸ் போனவங்க சீக்கிரம் வீட்டுக்கு போங்க - வெதர்மேன் ‛வார்னிங்’

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று முதல் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று மதியம் 12.23 மணிக்கு தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். மேகங்கள் வலுவிழப்பதாக நினைக்கவில்லை. ஒரே இடத்தில் மேகங்கள் குவிந்து இருக்கிறது. இதனால் இன்று அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரம் வீடு திரும்புவது நல்லது என அட்வைஸ் வழங்கி உள்ள அவர் இன்றும், நாளையும் என்ன நடக்கும்? என்பது பற்றி வார்னிங்கை செய்துள்ளார்.

சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழை இன்றும் தொடர்ந்து வருகிறது. இதனால் சென்னையில் பல இடங்களில் மழை நீர் தேங்கி உள்ளது.

chennai rain chennai chennai airport

இந்நிலையில் தான் தமிழ்நாடு வானிலை நிலவரம் பற்றி தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது எக்ஸ் பக்கத்தில் முக்கிய தகவலை குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் மதியம் 12.23 மணிக்கு தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‛‛மேகங்கள் வலுவிழப்பதாக நான் நினைக்கவில்லை. மாறாக ஒரே இடத்தில் மேகங்கள் குவிந்து அப்படியே இருக்கிறது. இது யாரையும் பயமுறுத்துவதற்காக அல்ல. அதாவது மழைக்கு இடைவெளி இருக்காது என்பதை தான் இது காட்டுகிறது.

மேகங்கள் ஒரே இடத்தில் குவியதால் குறைந்தபட்சமாக அடுத்த 3 மணிநேரத்துக்கு அதிக மழை என்பது இருக்கும். இதனால் அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமாக கிளம்புவது நல்லது. ஏனென்றால் நாளையும் மழை அதிகமாக இருக்கலாம். அதோடு சென்னையில் நள்ளிரவில் இருந்து சில இடங்களில் 200 மிமீ மழை பெய்துள்ளது'' என கூறியுள்ளார்.

தமிழ்நாடு வெதர்மேனின் இந்த பதிவுக்கு காரணம் வங்கக்கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தான் காரணம். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையவும் வாய்ப்புள்ளது. மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என்பது நாளை சென்னை மற்றும் தமிழ்நாட்டில் பல இடங்களில் மிக கனமழை என்பது பெய்ய உள்ளது. இன்றும், நாளையும் சென்னைக்கு ரெட் அலர்ட் என்பது விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் நாளை தினம் சென்னையை காற்றழுத்த தாழ்வு பகுதி நெருங்க உள்ளது. இதனால் நேற்று மற்றும் இன்றைய தினத்தை காட்டிலும் நாளை மழை அதிகரிக்கலாம். அதோடு குறிப்பாக இன்று மாலை முதல் மழை தொடர்ந்து பெய்ந்து மிக கனமழையாக நாளை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் தமிழ்நாடு வெதர்மேன் இந்த பதிவை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+