டெல்லியில் வடியாத வெள்ளம்.. அடுத்த 5 நாட்களுக்கும் மழை.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வடமாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. டெல்லி, இமாச்சல் ஆகிய மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

IMD issues Yellow alert to Delhi today it may cause moderate rain

இமாச்சலில் இருந்து அதிக அளவில் வெளியேறிய தண்ணீர் அரியானாவின் ஹத்னிகுண்ட் தடுப்பணையை அடைந்தது. அங்கிருந்து யமுனா நதியில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த யமுனா நதியில் இருந்து வெளியேறிய வெள்ளம் டெல்லிக்குள் புகுந்து விட்டது.

இதனால் சாலைகளில் மார்பளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. முதல்வர் அரவிந்த் கெஜரிவால் இருக்கும் வீட்டையும் வெள்ளநீர் சூழ்ந்தது. குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் நீர் புகுந்துவிட்டது. டெல்லியில் ஒரே நாளில் 15 செ.மீ. மழை பெய்தது. இது போதாது என யமுனா நதி வெள்ளமும் அந்த பகுதி மக்களை பாடாய்படுத்துகிறது.

எல்லா இடங்களிலும் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது. கார், இருசக்கர வாகனங்கள், பேருந்து உள்ளிட்டவை வெள்ளத்தில் சிக்கியுள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத அளவுக்கு தவித்து வருகிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுத்திகரிப்பு நிலையங்களில் வெள்ளம் புகுந்ததால் அணைகள் மூடப்பட்டன. இதனால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் யமுனை ஆற்றின் நீர் மட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவிட்டது.

நேற்று முன் தினம் யமுனை ஆற்றின நீர் மட்டம் 208 மீட்டராக உயர்ந்துள்ளது. ஆற்றின் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டி சென்றதால் பெருவாரியான வெள்ளம் டெல்லிக்குள் புகுந்துவிட்டது. இன்றும் மிதமான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் டெல்லிக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். டெல்லியில் 50 சதவீத பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அடுத்த 4 முதல் 5 நாட்களில் டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இதனால் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

டெல்லி வெள்ளக்காடாக காட்சியளிப்பதற்கு காரணம் அங்கு பெய்யும் மழை அல்ல. யமுனை நதிக்கு கிடைத்த ஏராளமான தண்ணீர் வரத்துதான். டெல்லியின் முகுந்த்பூரில் 10 முதல் 12 வயதுடைய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலியாகிவிட்டனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேடு எது பள்ளம் எது என தெரியாத அளவுக்கு வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மஞ்சள் எச்சரிக்கையானது- மோசமான வானிலையை குறிக்கும். வானம் மேகமூட்டமாக இருத்தல், இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடிய இடங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+