மீண்டும் தமிழகம் நோக்கி வங்க கடலில் வலுவிழந்த புயல் சின்னம்-துறைமுகங்களில் புயல் கூண்டுகள்!
சென்னை: வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்த நிலையில் ஆந்திரா நோக்கி நகர்ந்தது; தற்போது இந்த புயல் சின்னமானது மீண்டும் தமிழக கடற்கரை நோக்கி திரும்ப வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திடீர் காற்றுடன் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் சென்னை உட்பட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
ஆந்திரா கடலோரப் பகுதியில் வங்க கடலில் புயல் சின்னமான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவியது. இந்த புயல் சின்னம் நேற்று முன்தினம் வலுவிழந்தது. தற்போது இந்த புயல் சின்னமானது மீண்டும் தமிழகம் நோக்கி நாளை திரும்பக் கூடிய வாய்ப்புள்ளது என்கிறது இந்திய வானிலை ஆய்வு மையம்.

சென்னைக்கு கிழக்கே மத்திய வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத் தாழ்வுநிலை நிலவுவதால் இன்று முதல் டிசம்பர் 28-ந் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையும் நாளை மறுநாளும் வட தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது; அதிகாலையில் பனிமூட்டம் லேசான நிலையில் காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட 7 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. திடீர் காற்றுடன் மழைப் பொழிவு இருக்கும் என்பதால் 3-ம் எண் புயல் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications