ஆரஞ்ச் அலர்ட்.. தமிழக மக்களே உஷார் .. இந்திய வானிலை ஆய்வு மையம் வார்னிங்
சென்னை: தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் ஓரிரு இடங்களில், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் இன்னும் மீண்டு எழவில்லை. ஒருவாரம் மழை பெய்யாமல் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை டிசம்பர் 16 மற்றும் நாளை மறுநாள் டிசம்பர் 17ஆம் தேதியும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் 10 முதல் 20 செமீ வரை மிக கனமழை பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications