Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கை கொடுக்கும் ஐபிஎஸ் அதிகாரிகள்.. வெள்ள நிவாரண நிதியாக ஒரு நாள் சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக வரலாறு காணாத அளவில் பெய்த கன மழையினால் சென்னையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.

IPS officers gives 1 day salary for cyclone hit chennai flood relief works

சென்னை புறநகர்ப் பகுதிகளிலும், வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் இன்னும் மழைநீர் வீடுகளைச் சூழ்ந்துள்ளது. புயழ் மழை வெள்ளம் காரணமாக பேருந்து போக்குவரத்து, ரயில் சேவை ஆகியவை பாதிக்கப்பட்டன. கனமழை, வெள்ளத்தால் இதுவரை 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கோடிக்கணக்கான பொது சொத்துக்கள் மற்றும் பொருட்கள் சேதமடைந்துள்ளன.

பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். ரூ.5,060 கோடி வழங்குமாறு முதலமைச்சர் கோரியிருந்த நிலையில், முதற்கட்டமாக ரூ.450 கோடி மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் சென்னையில் வெள்ள மேலாண்மை என்ற புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து ரூ.561.29 கோடியை ஒதுக்கியுள்ளது.

வெள்ள பாதிப்பை தொடர்ந்து, சினிமா பிரபலங்கள் உள்பட பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகளின் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

IPS officers gives 1 day salary for cyclone hit chennai flood relief works

இதுகுறித்து தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள அழிவு மற்றும் இன்னல்களில் இருந்து தமிழக மக்களை காக்க தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. மக்கள் சேவைக்கான மாநில அரசின் முயற்சிகளுக்கு தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருந்து வருகிறது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்கும் வகையிலும், அரசின் முயற்சியில் கைகோர்க்கும் வகையில், தமிழ்நாடு ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம், தனது உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+