திருவொற்றியூர் டூ கோயம்பேடு.. சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்க்கும் கனமழை!
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை போதிய அளவுக்கு பெய்யவில்லை. ஆனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் போதுமான அளவுக்கு மழைப்பொழிவு இருந்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு பருவமழைகள் மழைப்பொழிவை கொடுக்கும். ஜூலை தொடங்கி செப்டம்பர் வரை பெற்றும் தென்மேற்கு பருவமழை கன்னியாகுமரி தொடங்கி கோவை வரை பரவலான மழை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக பெய்திருக்கிறது. ஆனால் தூத்துக்குடி மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு போதுமான மழை கிடைக்கவில்லை. இந்நிலையில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கிய இந்த மழை, தற்போது வரை பெய்து வருகிறது. ஆனால், இந்த காலங்களில் பெய்ய வேண்டிய மழையைவிட இயல்பை காட்டிலும் 2% குறைவாகவே பெய்திருக்கிறது. மாவட்டவாரியாக பார்த்தால் சென்னையில் 504.3 மி.மீ மழை பெய்திருக்கிறது. இது இயல்பை விட 1% அதிகம். சென்னையை தவிர, கோவை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்கங்களில் மழை இயல்பை விட அதிக அளவில் பெய்திருக்கிறது.
இன்று காலை விடுக்கப்பட்ட வானிலை அறிவிப்பின்படி, காலை 7 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம். தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டது. அதேபோல ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு லேசான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications