எதிர்பார்க்கவில்லை.. பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னை: மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும் என்றும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை நகரம் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. நேற்று நாள் முழுக்க விட்டு விட்டு மழை பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் மழை தீவிரம் அடைந்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாலைகளிலும் மழை நீர் வெள்ளம் போல பெருக்கடுத்து ஓடுகிறது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் அவற்றை அகற்றும் பணியில் முழு வீச்சில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.

எனினும் இன்றும் இரவு வரை தொடர்ந்து மழை பெய்ததால் சென்னை நகரம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. தமிழக அரசும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்தது. மழை நீர் பாதிப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் உடனுக்கு உடன் தீர்வு காணவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. எனினும் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று போல இன்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நிவாரண பணிகளை விரைந்து செய்யுமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். தொடந்து அங்கிருந்த மக்களுக்கு சிற்றுண்டி உணவு வழங்கினார். முட்டளவு தேங்கியிருந்த மழை நீர்ல் ஆய்வு செய்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து நிவாரண பணிகளை செய்து வருமாறு கூறினார்.
இந்த நிலையில், மழை, புயல் பாதிப்பில் இருந்து சென்னை மீள ஒரு நாள் ஆகும் என்றும், சென்னையில் இவ்வளவு பெரிய மழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று இரவு கொட்டும் மழைக்கு மத்தியிலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது தொகுதியில் மழை நீர் பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
கனமழைக்கு மத்தியிலும் நேரடியாக தொகுதிக்கே வந்த உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் மழை பாதிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். மழை நீர் தேங்கி பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.












Click it and Unblock the Notifications