வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்!
சென்னை: தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி (low level atmospheric) நிலவுவதால், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், இன்று நீலகிரி, குமரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 3 இடங்களில் வெயில் சதமடித்தது. வேலூரில் அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்லவே மக்கள் யோசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் ஜில் அப்டேட் ஒன்றை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக குமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்று குமரி மற்றும் நீலகிரியிலும், நாளை நீலகிரி மற்றும் கடலோர மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதற்கடுத்த நாட்களில் தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் வரும் 13 ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications