லோ வோல்டேஜ்.. ஏசி ட்ரிபிள் பூஸ்டரே திணறுது.. ஏசி வாங்கியும் இப்படி ஒரு சிக்கலா?
சென்னை: நெட்டிசன் ஒருவர் ஏசி ட்ரிபிள் பூஸ்டரே திணறுது. இன்புட் 127 மூன்று முறை. தொடர்ந்து 150-160 தான் வந்துச்சு. இப்ப பவர் கட். சப்ளை குறைவாக வரும்போது என்ன மின்சாதனம் அடி வாங்கும்னு பயத்திலேயே இருக்கிறோம். கரண்ட் பில்லும் கம்மியா கட்டினா ஏத்துப்பாங்களா? என்று சராமரியாக கேள்வி எழுப்பி உள்ளார். அதாவது குறைந்த மின் அழுத்தம் பிரச்சனை காரணமாக ஏசி உள்பட பல்வேறு சாதனங்கள் பழுதாகும் நிலை உள்ளது.இதனை தான் நெட்டிசன் கூறியிருந்தார். நெட்டிசன் கூறியதுபோல், ஏசி போட முடியாமல் தவிப்பர்கள் , உடனே ட்ரிபிள் பூஸ்டர் வாங்கினால் தான் ஓரளவு தப்பிக்க முடியும்.
இந்தியாவில் நாம் பயன்படுத்தும் ஏசி, பிரிட்ஜ் போன்ற அனைத்து வீட்டு உபயோக மின்சாதனங்களும் சரியாக வேலை செய்ய 220V முதல் 240V வோல்ட் ஏஜ் மின்சாரம் தேவையாகும். இந்த சூழலில் நெட்டிசன் ஒருவர், தங்களுக்கு வரும் மின்சாரத்தின் அளவு மிகக் குறைவாக 127V முதல் 160V வரை மட்டுமே வருகிறது என்று குமுறுகிறார். இதுதான் மிக மோசமான "குறைந்த மின்னழுத்தம்" ஆகும்.

இந்தச் சூழலில் சாதாரண ஸ்டெபிலைசரால் கூட வோல்டேஜை உயர்த்தித் தர முடியாது. அதனால்தான் அவர் வோல்டேஜை மூன்று மடங்கு பூஸ்ட் செய்யும் 'ட்ரிபிள் பூஸ்டர்' பயன்படுத்தியும் ஏசி திணறுவதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
சப்ளை குறைவாக வரும்போது எந்த மின்சாதனம் முதலில் 'அடி வாங்கும்'?
குறைந்த மின்னழுத்தம் வரும்போது மக்கள் பயப்படுவது முற்றிலும் நியாயமானது. இந்தச் சூழலில் பின்வரும் சாதனங்கள் மிக எளிதாகப் பழுதாகிவிடும். ஏசியில் இருக்கும் கம்ப்ரஸர் (Compressor) இயங்குவதற்கு அதிக மின்சாரம் தேவை. வோல்டேஜ் குறைவாக இருக்கும்போது, கம்ப்ரஸர் ஸ்டார்ட் ஆகாமல் திணறும். இதனால் ஏசியின் மோட்டார் சுருள்கள் சூடாகி, கம்ப்ரஸர் முற்றிலும் பழுதாகிவிடும்.
ஏசியைப் போலவே பிரிட்ஜின் கம்ப்ரஸரும் குறைந்த வோல்டேஜில் இயங்கும்போது மோட்டார் எரிந்துபோக அதிக வாய்ப்புள்ளது. நீர் இறைக்கும் மோட்டார் (Water Pump): வீட்டில் தண்ணீர் ஏற்றும் மோட்டாரை குறைந்த வோல்டேஜில் போட்டால், அது சுழலாமல் வெறும் சத்தம் மட்டும் வரும். சில நிமிடங்களிலேயே மோட்டார் கருகிவிடும்.
டிவி மற்றும் எல்இடி விளக்குகள்: இவற்றில் இருக்கும் எஸ்எம்பிஎஸ் சர்க்யூட் வோல்டேஜ் மாற்றங்களை ஓரளவுக்குத் தாங்கும் என்றாலும், தொடர்ச்சியான லோ-வோல்டேஜ் அவற்றின் ஆயுளைக் குறைத்துவிடும். பொதுவாக, ஒரு ஏசி எந்தவிதத் தடங்கலும் இல்லாமல் இயங்க குறைந்தபட்சம் 180V முதல் 200V வோல்டேஜ் இருக்க வேண்டும்.
வோல்டேஜ் 100V அல்லது 120V ஆகக் குறைந்தால், சாதாரண ஸ்டெபிலைசர்கள் வேலை செய்யாது; உடனே 'ட்ரிபிள் பூஸ்டர்' வாங்கினால் மட்டும்தான் ஓரளவுக்கு வோல்டேஜை 220V ஆக உயர்த்தி ஏசியைக் காப்பாற்ற முடியும்.
மின்சார வாரியம் தங்களுக்குச் சரியான வோல்டேஜில் தரமான மின்சாரத்தை வழங்காத போது, நாங்கள் மட்டும் ஏன் முழு மின் கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் நியாயமான கோபத்தைத்தான் அந்த நெட்டிசன் நையாண்டியாகக் கேட்டிருந்தார். ஆனால், நடைமுறையில் வோல்டேஜ் குறைவாக வந்தாலும் மின்சார மீட்டர்கள் நாம் பயன்படுத்தும் யூனிட்டுகளைத் துல்லியமாகக் கணக்கிட்டுவிடும் என்பதால், பில்லைக் குறைத்துக் கட்ட சட்டப்படி இடமில்லை.
இதுபோன்ற குறைந்த மின்னழுத்தப் பிரச்சினை இருக்கும் பகுதிகளில், பொதுமக்கள் தங்களின் ஏசி மற்றும் விலை உயர்ந்த மின்சாதனங்களை முற்றிலும் அணைத்து வைப்பதுதான் (Turn Off) புத்திசாலித்தனம். இல்லையென்றால் ட்ரிபிள் பூஸ்டர் வைத்திருந்தாலும் ஏசி பழுதாவது உறுதி தான்.












Click it and Unblock the Notifications