Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய பெருங்கடலில் கள்ளக்கடல் நிகழ்வு! தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்! சென்னை பீச்சுக்கு போகாதீங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழகம் மற்றும் கேரளா கடலோர பகுதிகளுக்கு இன்று முதல் நாளை இரவு வரை கடல் சீற்றத்துடன் காணப்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் எச்சரிக்கையும் முதல் முறையாக விடுக்கப்பட்டுள்ளது.

வெயில் படுத்தும் பாடு போதாக்குறைக்கு இந்த கடல் சீற்றம் வேறு மக்களை அச்சமடையச் செய்துள்ளது. இதனால் மேற்கண்ட கடல் எல்லைகளை கொண்ட கடல் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம். புரியும்படி சொல்வதென்றால் முதல் முறையாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Meteorological department warns about Kallakadal red alert for south tamilnadu coast

இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை இரவு 11.30 மணி வரை கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், விழுப்புரம், கடலூர், நாகை மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அது போல் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை ஆகிய கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுவாக கடல் சீற்றம் என்பது புயலோ, காற்றழுத்த தாழ்வு நிலையோ, கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கத்தின் போதும் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இது போன்ற எந்த நிகழ்வுகளும் இல்லாமல் பலத்த காற்றின் காரணமாக கடல் சீற்றம் என்பது கள்ளக்கடல் என அழைக்கப்படுகிறது. 16 முதல் 23 வினாடிகளுக்கு ஒரு அலை வீதமும் 1.8 மீட்டர் உயரம் கொண்ட பேரலைகள் உருவாக வாய்ப்புள்ளது.

கள்ள என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் கடல் சீற்றம் வருவதால்தான் இதை கள்ளக்கடல் என கேரள மக்கள் அழைக்கிறார்கள். இந்த கள்ளக்கடல் நிகழ்வு இரு நாட்களுக்கு தென் தமிழக கடலோர பகுதி மற்றும் கேரளாவில் ஏற்படலாம் என்பதால் மீனவர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணி முதல் நாளை இரவு 11.30 மணி திடீரென கடல் சீற்றம் ஏற்படும். இதையொட்டி மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது போல் மீனவர்கள் தங்கள் படகுகளை துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கவும் பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மீனவர்கள் மட்டும் இன்றி கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாகவும் முன்னெச்சரிக்கையுடனும் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடல் சீற்றம் ஏற்படும் போது கடலோரத்தில் உள்ள படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் இருக்க சற்று இடைவெளிவிட்டு படகுகளை நிறுத்தி வைக்க வேண்டும். வலைகள் உள்பட மீன்பிடி கருவிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மக்கள் கடற்கரைகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

கடல் அலைகள் 0.5 முதல் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும்பக் கூடும். தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெயில் ஆங்காங்கே வாட்டி வதைத்து வரும் நிலையில் மக்கள் அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் கடற்கரைக்கு சென்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆனால் கடல் கொந்தளிப்பு காரணமாக கடற்கரைக்கு பகுதிக்கு செல்ல வேண்டாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+