‛‛தென்னிந்தியாவுக்கு ஆபத்து’’.. குளிர் காலத்திலும் சைலன்ட்டாக அதிகரிக்கும் வெப்பம்! எச்சரித்த வானிலை
சென்னை: நாடு முழுவதும் தீவிர குளிர் நிலவி வருகிறது. ஆனால், தென்னிந்திய மாநிலங்களில் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
உலகம் முழுவதும் பொதுவாக 4 பருவ காலங்கள்தான் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும் 6 பருவ காலங்கள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக தென் மாநிலங்களில் இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர் காலம், முன் பனி, பின் பனி என பிரிக்கப்பட்டிருக்கிறது. டிசம்பர் மாதத்தின் நடுப்பகுதியில் தொடங்கி பிப்ரவரி நடுப்பகுதி வரை முன் பனி காலகமாகவும், பிப்ரவரி நடுப்பகுதியில் தொடங்கி ஏப்ரல் நடுப்பகுதி வரை பின் பனி காலமாகவும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பின்பற்றுகின்றன.

தற்போதும் நாம் முன் பனி காலத்தில் இருக்கிறோம். குளிர் அதிகமாக இருக்கிறது. பனி மூட்டம் காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு இயல்பை விட அதிகமான வெப்பநிலை நீடிக்கும் என தனியார் வானிலை ஆர்வலர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக கர்நாடகாவிலும், மேற்கு கடற்கரை பகுதியான கேரளாவின் சில பகுதிகளிலும் பகல் நேரத்தில் இயல்பான அளவை விட வெப்பம் அதிகமாக பதிவாகியுள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரில் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.7 டிகிரி செல்சியஸ். ஆனால் இந்த முறை பதிவான வெப்பம் இதுவரை பதிவான குறைந்தபட்ச வெப்பத்தை விட அதிகமாக இருக்கிறது. இரவில் குளிர் அதிகமாக இருந்தாலும் பகல் நேரத்தில் பதிவாகும் வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது கோடை காலம் குறித்த எச்சரிக்கை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பசிபிக் பெருங்கடலில் நிலவும் எல் நினோ காரணமாக இருக்கலாம். உலகின் மிகவும் பெரிய கடலான பசிபிக் பெருங்கடலில் ஆஸ்திரேலியா -ஆசியா பகுதியில் ஆண்டுதோறும் சூடான காற்று மேலெழும் அதேபோல அதற்கு எதிர் திசையில் உள்ள அமெரிக்க பகுதியில் உள்ள பசிபிக் கடலில் குளிர்ச்சியான காற்று மேலெழும் இந்த இரண்டும் ஒரு கட்டத்தில் ஒன்று கலந்து வானிலையை இயல்பாக வைத்திருக்கும்.

இந்த காற்றுதான் வெறும் 29 சதவிகிதமே உள்ள நிலப்பரப்பில் மழைபொழிவை உருவாக்குகிறது. ஆனால் இந்த இரண்டு பசிபிக் கடல் பகுதியிலும் ஏதேனும் ஒரு பகுதியில் காற்று உருவாவது தடைபட்டுவிட்டால் வானிலையில் மாற்றம் ஏற்படும். இதைத்தான் எல் நினோ என்று சொல்லப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும், தமிழ்நாட்டில் வெப்பநிலை குறைந்த அளவே பதிவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
காலியாக போகும் காவிரி.. வேலையை காட்டும் வெயில்! இந்த வருஷம் சம்பவம் இருக்கு! வெதர்மேன் வார்னிங்! -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications