அடுத்த 2 மணி நேரம்! கனமழை கொட்டப்போகுது.. நெல்லை, தூத்துக்குடி, தஞ்சை உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது பிற்பகல் 1 மணி வரை நெல்லை, தென்காசி, குமரி, தஞ்சை, நாகை, புதுக்கோட்டை உள்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு அதிக மழைப்பொழிவை தரும் வடகிழக்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல், தென்மேற்கு அரபிக் கடலில் வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

Next 2 hours Heavy rain is going to pour, Alert for 9 districts including Nellai, Tuticorin

குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசனாது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது மதியம் 1 மணி வரை தமிழகத்தின் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: - தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதேல்போல் மயிலாடுதுறை, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+