ஊட்டி டூரிஸ்ட் ஸ்பாட்ஸ் மூடல்.. மழை நீரில் தத்தளிக்குது நீலகிரி! கரண்ட் வேற இல்லை.. அதிகாரிகள் சபாஷ்
ஊட்டி: ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்றும் ஒருநாள் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல். தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், ஷூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மூடல். அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது. எனினும் நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் இது சீசன் காலமாகும்.. வழக்கமாக இந்த நேரத்தில் லேசான மழை காணப்படும்.. ஆனால், ரெட் அலர்ட் வரை சென்றது இந்த முறைதான்.. இதை சுற்றுலா பயணிகள் உட்பட மாவட்ட மக்களே எதிர்பார்க்கவில்லை.

ரெட் அலர்ட் வார்னிங்
ரெட் அலர்ட் எச்சரிக்கை வந்ததுமே, மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கியது.. தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது.. அத்துடன். தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைகாரா நீர்வீழ்ச்சி, அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம் ஆகிய நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்கள் அனைத்தும் மழை காரணமாக மூடப்படுவதாக அறிவித்தது. இதனால், சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த பயணிகள் தங்களது பயணத்தை ரத்து செய்துவிட்டனர்..
மின்சாரம் துண்டிப்பு
கடந்த 3 நாட்களாகவே நீலகிரியில் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கிறது.. மரங்கள் விழுந்துள்ளன.. மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, குன்னூர் பகுதிகளில் 20 இடங்களில் மண் சரிவு, 43 மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அணைகள் நிரம்புவதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தீவிரமாக பெய்து வருவதால் பல இடங்களில் மண் அரிப்பு, மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால், நீலகிரி மாவட்டத்துக்குள் பாயும் நிறைய ஓடைகளிலும், ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஏற்பட்டுள்ளது..
குறிப்பாக, ஊட்டி அருகே பெம்பட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. சுமார் 50 அடி நீளத்திற்கு இந்த மண் சரிவு ஏற்பட்டதால், வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டது.
அதேபோல, ஊட்டி-மஞ்சூர் சாலையில் காந்திப்பேட்டை பகுதி, ஊட்டியில் இருந்து உல்லத்தி கிராமத்திற்கு செல்லும் சாலை, புதுமந்து செல்லும் சாலை, ஜல்லிக்குழி செல்லும் சாலையிலும், கேத்தி காவல் நிலையம் மீதும், மேரிஸ் ஹில் பகுதியில் வீட்டின் மீதும் மரம் விழுந்தது. கோடப்பமந்து செல்லும் சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. மஞ்சூர் அருகே கிண்ணக்கொரை சாலையில் ராட்சத மரங்கள் விழுந்தன. எனினும், மாவட்ட நிர்வாகம் துரிதமான நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வருகிறது.
சுற்றுலா தலங்கள் மூடல்
ஊட்டியில் விடிய விடிய மழை கொட்டி வருகிறது. நேற்று முழுவதும் அனைத்து சுற்றுலா தலங்கள் மூடப்பட்டிருந்தன.. நேற்று முன்தினமே இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.. இந்நிலை மாவட்ட மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, ஊட்டியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்றும் ஒருநாள் மூடப்படுகிறது என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
மாவட்ட நிர்வாகம் அதிரடி
தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, உதகை, பைக்காரா படகு இல்லம் என அனைத்து சுற்றுலா தலங்களும் மூடல். தொட்டபெட்டா காட்சி முனை, பைன் ஃபாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா நீர்வீழ்ச்சி மூடல், அவலாஞ்சி சூழல் சுற்றுலா மையம், டால்பின் நோஸ், லேம்ஸ் ராக் சுற்றுலா தலங்களும் மூடப்படுகிறது.
அதேபோல, பொதுமக்களின் பாதுகாப்பிற்காக பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து தயார் நிலையில் உள்ளனர். அவர்கள் பல இடங்களில் மக்களை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி தங்க வைத்து வருகிறார்கள்.. மேலும் பொதுமக்களுக்கு, பால், குடிநீர் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
நேற்றுமுன்தினம் விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை நேற்றும் நீடித்தது. நேற்று அதிகபட்சமாக அவலாஞ்சியில் 35 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அப்பர் பவானியில் 29.8 செ.மீ, ஊட்டியில் 7 செ.மீ, நடுவட்டத்தில் 8 செ.மீ, கிளன்மார்கனில் 10.5 செ.மீ,, குந்தாவில் 11.5 செ.மீ, கூடலூர் 15.3 செ., பந்தலூர் 13.7 செ.மீ. மழை பதிவானது. மொத்தத்தில் கடுமையான மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications