Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஊட்டியில் உறைபனி! சாலைகளில் வெள்ளை கம்பளம்.. நடுங்கும் உதகை! காரணம் என்ன?

Subscribe to Oneindia Tamil

ஊட்டி: உதகையில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் அங்கு கடுங்குளிரில் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.

நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் இறுதி வரை உறைபனியின் தாக்கம் அதிகளவில் இருக்கும். ஆனால் இந்த ஆண்டில் நவம்பர் முதல் கடும் மேகமூட்டம் காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்து வந்ததால் உறைபனி ஏற்படவில்லை.

Ooty Snow fall formed very late and people affected

நீர் பனி விழுவதும் தாமதமானது. இந்த நிலையில்தான் நேற்று முன் தினம் காலை முதலே ஊட்டியில் புல் மைதானங்கள், தாவரவியல் பூங்கா, குதிரை பந்தய மைதானம் உள்ளிட்ட இடங்களில் நீர் பனிப்பொழிவு அதிகமாக இருந்தது.

சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள், புற்கள், சாலைகள் மீது உறைபனி அதிகளவில் இருக்கிறது. அதிலும் தலைகுந்தா பகுதியில் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அது போல் உதகை நகரில் 5 டிகிரி செல்சியஸாக வெப்பநிலை உள்ளது. மேலும் காந்தல், பிங்கர் போஸ்ட் பகுதிகளிலும் அதிக அளவு உறைபனி உள்ளது.

இந்த நிலையில் கடுங்குளிரால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள். சுமார் 50 நாட்களுக்கு பிறகு உறைபனி தொடங்கியது. காலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரால் மக்கள் நடுங்குகிறார்கள். சுற்றுலா பயணிகளும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இனி வரும் நாட்களில் இந்த உறைபனி அதிகமாகவே இருக்க வாய்ப்புள்ளது. ஊட்டியில் கடந்த 22 ஆம் தேதி குறைபட்ச வெப்பநிலை 11 டிகிரியாக இருந்தது. தற்போது பள்ளி விடுமுறை, கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

சாலைகள், வாகனங்களின் மேல் வெள்ளை கம்பளம் போர்த்தியது போல் உறைபனி நிலவி வருகிறது. காலம் தாமதமாக உறைபனி தோன்றியதற்கு காரணம் தெரியவில்லை

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+