சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு இரண்டு பருவமழைகள் மழைப்பொழிவை கொடுக்கும். முதலில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலான மழையை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை கன்னியாகுமரி முதல் கோவை வரை அடித்து பெய்தது. ஆனால் தூத்துக்குடி தொடங்கி, வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மழை இயல்பான அளவை விட குறைவாக பெய்திருந்தது.

chennai rain

இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இம்மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் இயல்பை விட 5 சதவிகிதம் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இப்படி இருக்கையில் நவ.21ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.

மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.

ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+