Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் பகலை இருளாக்கும் அளவிற்கு கனமழை... ஒரு மழை என்னவெல்லாம் செய்தது தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, திருவல்லிக்கேணி, அடையாறு மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. சென்னையில் பகலை இருளாக்கும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.

weather Chennai rains rain

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது.

சென்னையில் வானிலை மையம் அறிவித்தபடியே கனமழை பெய்தது. காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல 3 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பகலை இரவாக்கியது. அதன்பிறகு அப்படியே சிறிய காற்றுக்கூட இன்றி நின்று 3.25 மணி அளவில் நிதானமாக கனமழை பெய்ய தொடங்கியது.

weather chennai rains rain

குன்றத்தூர் தொடங்கி இந்த பக்கம் திருவல்லிக்கேணி வரையிலும், அந்த பக்கம் தாம்பரம் தொடங்கி வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும், பள்ளிக்கரணை, பெருங்குடி, மடிப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் என சென்னையின் தெற்கு பகுதிகளிலும் கனமழை பெய்தது. வானத்தில்வெடி வெடித்தது போல் இடிகள் இடித்தபடி கனமழை பெய்தது.

இந்த மழையால் சென்னையில் குளுகுளுவென வானிலை மாறி உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல பகுதிகளில் உள்ள நீண்ட நாள் பிரச்சனையான நிலத்தடி நீர்மட்டம் உயரப்போகிறது. இந்த மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதேநேரம் சாலையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றன. இந்த மழையால் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாக குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+