தமிழக மக்களே கவனம்.. காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை இருக்கு.. உங்க ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்கள் உள்ளது.
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் முற்றிலுமாக குறைந்து சாரல் மழை இருந்து கொண்டே இருக்கிறது.

மொத்தமாக கூற வேண்டும் என்றால் தமிழகத்தில் வெயில் என்பது இல்லை. குளிர்ச்சியான சூழல் தான் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை 3 மணிநேரத்துக்கான வானிலை தகவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி , திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 15 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் மக்கள் கையில் குடையை வைத்து கொள்வது நல்லது.












Click it and Unblock the Notifications