சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு!
சென்னை: சென்னை உட்பட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்பை எதிர்கொண்டன. மிக்ஜாம் புயல் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்தது.

மிக்ஜாம் புயலில் இருந்து தற்போதுதான் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மீண்டு வந்துள்ளன. மிக்ஜாம் புயலில் பாதிக்கப்பட்டோருக்கு தமிழ்நாடு அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி,தென்காசி, கன்னியாகுமரி என 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications