அடடா மழைடா அடை மழைடா.. வெளுத்து வாங்கப் போகுது மழை! ஊட்டியாகப் போகுது ’இந்த’ ஊர்கள்! வானிலை அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கணித்துள்ளது.
பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவு வெயில் பதிவான நிலையில், வெப்பம் உச்சத்தை தொடும், ஏப்ரல் மே மாதங்களில் அடிக்கடி மழை பெய்து மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இனி தொடர்ந்து மழைக் காலம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் முழுவதும் மிகக் கடுமையான வெயில் கொளுத்தியது.
பருவமழையும் கை கொடுக்காத நிலையில் தற்போது வழக்கம் போல் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தான் மழை பெய்யுமா என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போதைய பலத்த காற்று வீச தொடங்கி விட்டது. ஆனால் உள் மாவட்டங்களில் மிகக் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் தேனி, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை அவ்வப்போது மழை பெய்கிறது.

வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என கணித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், இன்று மற்றும் நாளை தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 15ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு, தென்மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்" என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications