"அடுத்த ஒரு வாரம்.." தமிழகத்திற்கு நல்ல மழை இருக்கு! சென்னை கிளைமேட் என்ன! வானிலை மையம் அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட வானிலை நிலவும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது,

தமிழ்நாட்டில் கடந்த பருவமழை காலத்தில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தது. ஆனால், அதன் பிறகு மாநிலத்தில் வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது. பொதுவாக ஏப்ரல் மாதம் தான் வெயில் உச்சத்தைத் தொடும்.

Rain in Tamilnadu for next one week says Chennai meteorological dept

ஆனால், இந்த முறை பிப். மாதமே வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகபட்ச வெப்பம் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கே 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

கடும் வெப்பம்: கடந்த 24 மணி நேரத்தில் கரூர், மதுரை, ராமநாதபுரம், சென்னை, ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.

தமிழ்நாடு வானிலை: இது தொடர்பாக வானிலை மையம் பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பிப். 23ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

பிப். 24 மற்றும் பிப். 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

மழை இருக்கு: மேலும், பிப். 26 முதல் பிப். 28 வரையிலான தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று பிப்.29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்

சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிக்குடி, கொடுமுடியாறு அணைப் பகுதியில் கணிசமாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+