அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் வெளுக்க போகும் மழை.. தமிழகத்தின் 10 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நேற்று மாலை முதல் பல்வேறு இடங்களில் கனமழை (Heavy rain alert) கொட்டி வருகிறது. இதனால் ஒரு சில இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இன்று காலையிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. கோவை, விருதுநகர், சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், பெரம்பலூர், மதுரை என பல்வேறு மாவட்டங்களில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒரு சில இடங்களில் தாழ்வான சாலைகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

rain-likely-in-10-districts-of-tamil-nadu-in-next-3-hours-alert-for-ramanathapuram-sivaganga

10 மாவட்டங்கள் என்னென்ன?

இந்த நிலையில் இன்றும் மழை தொடர்ந்தது. காலையிலேயே 16 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது. மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் காலையிலேயே மழை பெய்தது. இந்த நிலையில் அடுத்த 3 மணி நேரத்திலும் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- "தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரம் அதாவது, இன்று மதியம் 1 மணி வரை கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

15 ஆம் தேதி வரை மழைக்கு சான்ஸ்

முன்னதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- "தெற்கு கடலோர ஆந்திரபிரதேச பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும் இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 12-08-2025 முதல் 15-08-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (10-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+