சென்னைக்கு வெளியே நிலைமை மோசம்.. மழைநீர் வடியாமல் தவிக்கும் மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளதால், பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். ஏராளமான வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று இரவு வரை விடாமல் கொட்டிய கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலையில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கி இருப்பதனால் பல இடங்களில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

Rain water is still not draining in most places of tambaram sorrunding areas

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பிரதான சாலைகளில் வெள்ள நீர் முற்றிலுமாக வடிந்துவிட்டது. உட்புற சாலைகள், மற்றும் மிகவும் தாழ்வான பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அங்கும் மழைநீரை வடியச் செய்வதற்கான முயற்சிகளால் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேசமயம், தாம்பரம், முடிச்சூர், மீஞ்சூர் என சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் மிக மோசமாக உள்ளது. முடிச்சூர் பகுதிகளில் இன்னும் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், இன்னும் மழைநீர் மட்டம் குறையாமல் இருந்து வருகிறது. மழை ஓய்ந்தும், வெள்ள நீர் குறையாமல் இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

அதேபோல, மேற்கு தாம்பரம் பகுதியில் தரைத்தளத்தில் இருக்கும் வீடுகளை மழைநீர் மூழ்கடித்துள்ளது. புறநகர் பகுதி மக்களை, அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. தற்போது, பேரிடர் மீட்புப் படையினர் இப்பகுதியில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மேலும், தாம்பரம், செங்கல்பட்டு, முடிச்சூர், பெரும்பாக்கம் மக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9445000953, 9788662991, 9941562550, 9159369755 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஏராளமானோர், செல்போன்களை வெள்ளத்தில் இழந்து, வெளியிலும் வர முடியாமல் வீடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மோசமான சூழல் நிலவுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+