கடுமையான புயலாக கரையை கடந்த ரெமல்.. ரயில் சக்கரங்களை சங்கிலி போட்டு கட்டி வைத்த ஊழியர்கள்
கொல்கத்தா: 'ரெமல்' புயல் தீவிர புயலாக மாறி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையக் கடக்கத் தொடங்கியுள்ளது. கரையை கடந்து முடிய 4 மணி நேரமாகும் (cyclone remal landfall) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தாவை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் இருந்து சுமார் 394 விமானங்கள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் ரயில்களை சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்து வரும் காட்சிகள் வெளியாகி திகில் கிளப்பியுள்ளன. ஹவுராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை சீல்டா தெற்கு மற்றும் பராசத்-ஹஸ்னாபாத் பிரிவுகளில் ரயில் சேவைகளை நிறுத்தியுள்ளது.
பல உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பணிகளுக்கு செல்வோர் பாதிக்கப்படக்கூடும். தென்கிழக்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை கந்தாரி எக்ஸ்பிரஸ் மற்றும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் திகாவிற்குச் செல்லும் சில ரயில்களையும் ரத்து செய்துள்ளது.
மே 26-27 தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவிலும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னறிவிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சரக்கு மற்றும் கொள்கலன் கையாளுதல் நடவடிக்கைகள் 12 மணி நேரம் நிறுத்தப்பட்டு உள்ளது. பேரிடர் மீட்பு படையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை எச்சரித்து வருகிறார்கள்.
இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) ஹல்டியா, ஃப்ரேசர்கஞ்ச், பரதீப் மற்றும் கோபால்பூர் ஆகிய இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பேரிடர் நிவாரண குழுக்களுடன் கப்பல்கள் மற்றும் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications