மிக்ஜாம் புயலால் 'கரண்ட் கட்' ஆகாது! டக்கராக மாறிய சென்னை.. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடக்க இருக்கும் நிலையில், சென்னையில் மழை தீவிரமடைந்துள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இதற்கு 'மிக்ஜாம்' என பெயரிட்டுள்ளனர். இப்புயல் வரும் 5ம் தேதி சென்னைக்கும்-தெற்கு ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதன் பாதை மாறியது.

அதாவது தெற்கு ஆந்திராவின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சென்னையில் சூறைக்காற்றும், கடும் மழையும் இருக்கும் எனவும் எச்சரித்திருந்து. எனவே சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்திருக்கிறார்.
அவர் பேசியதாவது, "புயலை எதிர்கொள்ள தமிழக அரசு 100 சதவிகிதம் தயாராக இருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு காணொலி மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். புயல் நெருங்கும்போது மழை தீவிரமாக இருக்கும். எனவே கடலோரமாக வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.
இதற்கான முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உட்பட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 43 தீயணைப்பு நிலையங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

பொதுவாக புயல் காலங்களில் மின்வெட்டு என்பது இருக்கும். ஆனால் இந்த முறை மின்வெட்டு ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சாலை ஓரங்களில் இருக்கும் ஜங்சன் பாக்ஸின் உயரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே மழைநீர் இதற்குள் புகாது. மேலும் பலமாக சேதமடைந்துள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய கம்பங்கள் நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. பலத்த காற்று இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.
கனமழையை பொறுத்த அளவில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிக கன மழை பெய்யும் என்றும், மணிக்கு 70 கி.மீ வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications