10 இடங்களில் செஞ்சுரி போட்ட வெயில்.. வேலூரில் அதிகபட்ச வெப்பநிலை பதிவு!
சென்னை: தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. அந்த வகையில் இன்று சுமார் 10 இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்திருக்கிறது. குறிப்பாக வேலூரில் அதிகபட்ச வெயில் பதிவாகியிருக்கிறது.
வழக்கமாக வேலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் வெயில் அதிகரித்திருக்கிறது.

- வேலூர் - 105.8
- கருர் பரமத்தி - 104.9
- ஈரோடு - 103.3
- மதுரை விமான நிலையம் - 103.1
- நாமக்கல் - 102.4
- மதுரை நகரம் - 100.8
- சேலம் - 100.6
- திருத்தணி - 100.6
- திருப்பத்தூர் - 100.4
- திருச்சி - 100.2
என வெயில் பதிவாகியிருக்கிறது. முன்னதாக இன்று மதியம் வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில்,
அதிகபட்ச வெப்பநிலை
24 மணி நேர அதிகபட்ச வெப்பநிலை மாறுதல்: 11-04-2026 மற்றும் 12-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும்.
13-04-2026 முதல் 15-04-2026 வரை:: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.
11-04-2026 மற்றும் 12-04-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். 13-04-2026 முதல் 15-04-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
11-04-2026 முதல் 13-04-2026 வரை: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications