Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ditwah Schools leave: அதிகனமழை எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 'கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை (நாளை) அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (நாளை) விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Cyclone Ditwah Weather

பள்ளிக் கல்வித் துறையின் கால அட்டவணைப்படி இன்றைய தினம் விடுமுறை நாள்தான். ஆனால் தனியார் சுயநிதி பள்ளிகளில் வகுப்பு இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.

இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் டிட்வா புயல் டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக் கூடும். இதன் காரணமாக டெல்டா மற்றும் அதையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று (டிச.29) மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை ('ரெட் அலர்ட்') பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.

புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+