Tamil Nadu Weather: இன்னைக்கு ஒரு புடி.. தமிழகத்தை பதம் பார்க்கப் போகும் மழை! ஏற்கனவே ’மார்க்’ செய்யப்பட்ட மாவட்டங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும், குறிப்பாக வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெயிலும் மழையுமாக மாறி மாறி இருந்த தமிழகத்தின் காலநிலை முழுமையாக மழையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆடி மாதம் பலத்த காற்று வீசிய நிலையில் தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.

தென்மேற்கு பருவ மழை வலுவிழந்திருக்கும் நிலையில் அடுத்ததாக புயல்கள் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதை அடுத்து சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள், மத்திய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Tamil Nadu Weather

தமிழ்நாடு வானிலை

இந்நிலையில், தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் எட்டு மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," தென்னிந்தியப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டலக் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

மழை முன்னறிவிப்பு

இதனால், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று காலை 10 மணி வரை வேலூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூறும் இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கலாம். போக்குவரத்து பாதிப்பு ஏற்படலாம்.

வானிலை

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (17-09-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தமிழக கடலோர பகுதிகளில் வரும் செப்டம்பர் 20ம் தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல், வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்" என கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+