Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தாம்பரமே நனைந்தது.. விடிய விடிய கொட்டிய மழை.. அடுத்த 7 நாட்களுக்கு தமிழகம் முழுக்க மழை.. ஜில் நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு, தமிழகமெங்கும் பரவலாக மழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் ஜில் ஜில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்பே கணித்து கூறியிருந்தது.
வளிமண்டல சுழற்சி: வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, வரும் ஞாயிறன்று, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை சிவகங்கை, கரூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கடலூர், சேலம், ஈரோடு, பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Tamil Nadu Weather report and 7 days chance of rain in Tamil Nadu, says meteorological center

அதேபோல, தமிழகத்தின் மற்ற வட மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழையும் பெய்ய கூடும்.

மீனவர்கள்: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகள் தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.

இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது.. இதில், அடுத்த 7 நாட்களுக்கு மழை வரப்போவதாக கூறியுள்ளது.. அதில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் நாளை முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாம். வானிலை ஆய்வு மையம் இதுகுறித்த அறிவிப்பில், "இன்றைய தினம், தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

எதிர்பார்ப்பு: 26, 27ல் தமிழ்நாடு, புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்

ஆக, இன்றுமுதல் வருகின்ற 31ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழைப்பெய்வது மிகுந்த மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறது.

Tamil Nadu Weather report and 7 days chance of rain in Tamil Nadu, says meteorological center

இதனிடையே, சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் ஆங்காங்கே மழைநீர் சூழ்ந்தது.. குறிப்பாக, மேற்கு தாம்பரம் பகுதியில் 11.4 சென்டிமீட்டர் அளவுக்கு கன மழை பெய்துள்ளது. இதன் காரணமாக தாம்பரத்தில் மேற்கு பகுதியில் இருந்து கிழக்குப் பகுதிக்கு செல்லும் ெரயில்வே சுரங்கப்பாதை முழுவதும் மழை நீர் தேங்கி நின்றது. இதன்காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பில், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வெகுவாக பாதிக்கப்பட்டனர்.

பெருங்களத்தூர்: அதேபோல பழைய ஜி.எஸ்.டி. சாலை, குரோம்பேட்டை, பல்லாவரம் ஜிஎஸ்டி சாலை, செம்பாக்கம், திருமலை நகர், பெருங்களத்தூர் ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+