சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வறண்ட வானிலை! டமால் டுமீல் மழை எப்போது? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் மேற்கு பருவமழையால் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தம் நிலத்தை நோக்கி வீசுவதால் தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும். எங்கெல்லாம் வறண்ட வானிலை நிலவும் என்பதை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

கேரளா, மகாராஷ்டிரா, தமிழகத்தின் ஒரு சில பகுதிகளுக்கு நன்மையை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை செயல்பாட்டில் உள்ளது. இதனால் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

rain tamil nadu weatherman

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியிருப்பதாவது: பருவமழையில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை நிலத்தை நோக்கி வீசுகிறது. தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை.

சென்னையில் இன்று வெயில் இருக்கும். மாலை நேரங்களில் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. டமால் டுமீல் மழைக்கு காத்திருக்க வேண்டும். அடுத்த இரு வாரங்களுக்கு வறண்ட வானிலைதான் மேற்கண்ட 4 மாவட்டங்களில் நிகழும்.

தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலையே இருக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக மழை பெய்யும். நீலகிரி மாவட்டம் பந்தலூர், தேவாலா, அவலாஞ்சி ஆகிய இடங்களிலும் வால்பாறை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் தென் மேற்கு பருவமழை பெய்யும். ஆனால் அபாயகரமானதாக இருக்காது.

கேரளாவிலும் பருவமழை பெய்யும். அங்கும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற அபாயங்கள் இருக்கும். இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திராவுக்கும் தெலுங்கானாவுக்கும் எந்த ஆபத்தும் இல்லை என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பதிவில், கடந்த 3 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஜூன் முதல் செப்டம்பர் வரை எந்த நிற எச்சரிக்கை கொடுத்தாலும் பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்க்க வேண்டாம். கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி வட சென்னை, மத்திய சென்னையில் சராசரியாக 30 முதல் 50 மி.மீ . மழை பெய்தது.

ஆனால் தென் சென்னையான அடையாறு, பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் மழை பெய்யவில்லை என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்த நாள் செப்டம்பர் 3 ஆம் தேதி தென் சென்னை பகுதிகளுக்கும் மழை பெய்தது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பலர் தங்கள் குடும்பத்தினரை இழந்து ஆதரவற்றவர்களாகினர். பலருக்கு வீடு, வாசல் இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்காக அண்டை மாநிலங்கள், திரைத் துறையினர் கேரளாவில் வெள்ள நிவாரண நிதியையும் நிவாரண பொருட்களையும் அனுப்பி வைத்தனர். ஆந்திரா, தெலுங்கானாவில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால் பயிர்கள், வாகனங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மழை வெள்ளத்தால் 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+