கூலிங் மோடில் தமிழ்நாடு! கொட்டோ கொட்டுனு கொட்டப் போகும் மழை! வெதர்மேன் கொடுத்த இனிப்பான அப்டேட்!
சென்னை: தமிழகத்தில் கடுமையான வெப்பம், வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நற்செய்தி ஒன்று வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகம் உள்ளிட்ட தென் தீபகற்ப மாநிலங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மகிழ்ச்சி தரும் செய்தியை கூறியுள்ளார்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் நாளுக்கு நாள் வெப்பநிலை கடுமையாக அதிகரித்து வருகிறது

குறிப்பாக வேலூர் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலையானது கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வருவதற்கே அச்சப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெப்ப அலை: இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பநிலை நான்கு முதல் ஐந்து டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், சில மாவட்டங்களில் 115 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பரவலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருக்கிறது. மேலும் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெப்ப அலை தமிழகத்திற்கும் பரவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடும் அச்சம்: மேலும் 1 ஆம் தேதியிலிருந்து 5 ஆம் தேதி வரை தமிழக உள் மாவட்டங்களில் ஐந்து தினங்களில் அடுத்தடுத்து வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் எனவும் 5ஆம் தேதி வரை அடுத்த ஐந்து தினங்களில் வட தமிழக மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகக் கவனமுடன் இருக்க வேண்டுமென எச்சரிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பிலும் கோடை வெயிலை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது
வெதர்மேன்: இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் கோடை காலத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை மைய ஆய்வாளரான பிரதீப் ஜான் தெரிவித்து இருக்கிறார். இது குறித்து பேசி உள்ள அவர், ' கடுமையான வறட்சி தண்ணீர் பற்றாக்குறை உள்ளிட்டவற்றால் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தற்போது மிகப்பெரிய நல்ல செய்தி ஒன்று வந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென் தீபகற்ப மாநிலங்களில் கன மழை பெய்ய உள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு: எல்-நினோ வருகையால் நடப்பாண்டில் வெப்பச் சலனம் காரணமாக மழை பரவலாக பெய்யும். மேலும் தென் மேற்கு பருவக்காற்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தொடர் கனமழையையும் தற்போதைய வானிலை முன் கணிப்பின் அடிப்படையில் நடப்பாண்டு கனமழை பெய்வதை உறுதி செய்யும் என தெரிவித்திருக்கிறார். இதே போல் இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்திருக்கும் நிலையில் வரும் வாரங்களில் தமிழகத்தில் நல்ல கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications