தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுகிறது- நெல்லையில் கரை புரண்டோடும் பெருவெள்ளம்!
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அணைகளின் நீர் திறப்பு, அருவிகள், காட்டாறுகளில் இருந்து வெள்ளம் அதிகரித்திருப்பதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென் தமிழ்நாடு மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியாக இருப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆற்றில் அருவிகளின் வெள்ளம், காட்டாறு வெள்ளம் இயல்பாகவே கலக்கும். அதேபோல மணிமுத்தாறு உள்ளிட்ட பல அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் தாமிரபரணியில்தான் திறந்துவிடப்படும். தாமிரபரணி ஆற்று நீரானது புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கும். தாமிரபரணி ஆறானது 60,000 கன அடிநீரை தாங்கக் கூடியது.

இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதலே வரலாறு காணாத பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் இந்த மாவட்டங்களின் அணைகளில் இருந்து பெருமளவு நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதேபோல காட்டாறுகள், அருவிகளின் வெள்ளமும் தாமிரபரணியில் பாய்ந்தோடின.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 117 கனஅடி நீர்வரத்து உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தாமிரபரணி நதியின் 60,000 கன அடி நீர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. இது தற்போது 1 லட்சம் கன அடிநீராக அதிகரித்துள்ளது. இதனால் திருநெல்வேலி நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்று சுவரைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. திருநெல்வேலியில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
1992-ம் ஆண்டு தாமிரபரணியில் சுமார் 2 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடியது. 2015-ம் ஆண்டும் தாமிரபரணியில் 2 லட்சம் கன அடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னர் தற்போதுதான் தாமிரபரணியில் அதிக அளவாக 1 லட்சம் கன அடிநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications