தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுகிறது- நெல்லையில் கரை புரண்டோடும் பெருவெள்ளம்!
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் 1 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடுவதால் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. அணைகளின் நீர் திறப்பு, அருவிகள், காட்டாறுகளில் இருந்து வெள்ளம் அதிகரித்திருப்பதால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென் தமிழ்நாடு மாவட்டங்களில் வற்றாத ஜீவநதியாக இருப்பது தாமிரபரணி ஆறு. தாமிரபரணி ஆற்றில் அருவிகளின் வெள்ளம், காட்டாறு வெள்ளம் இயல்பாகவே கலக்கும். அதேபோல மணிமுத்தாறு உள்ளிட்ட பல அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரும் தாமிரபரணியில்தான் திறந்துவிடப்படும். தாமிரபரணி ஆற்று நீரானது புன்னைக்காயல் அருகே கடலில் கலக்கும். தாமிரபரணி ஆறானது 60,000 கன அடிநீரை தாங்கக் கூடியது.

இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதலே வரலாறு காணாத பேய்மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் இந்த மாவட்டங்களில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பெரும்பாலான அணைகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் இந்த மாவட்டங்களின் அணைகளில் இருந்து பெருமளவு நீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதேபோல காட்டாறுகள், அருவிகளின் வெள்ளமும் தாமிரபரணியில் பாய்ந்தோடின.
பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து வினாடிக்கு 36 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 27 ஆயிரத்து 117 கனஅடி நீர்வரத்து உள்ளது. மணிமுத்தாறு அணையில் இருந்து 8000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தாமிரபரணி நதியின் 60,000 கன அடி நீர் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. இது தற்போது 1 லட்சம் கன அடிநீராக அதிகரித்துள்ளது. இதனால் திருநெல்வேலி நகர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக சுற்று சுவரைத் தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது. திருநெல்வேலியில் இருகரைகளையும் தொட்டபடி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.
1992-ம் ஆண்டு தாமிரபரணியில் சுமார் 2 லட்சம் கன அடிநீர் பாய்ந்தோடியது. 2015-ம் ஆண்டும் தாமிரபரணியில் 2 லட்சம் கன அடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. அதன்பின்னர் தற்போதுதான் தாமிரபரணியில் அதிக அளவாக 1 லட்சம் கன அடிநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications