டமால் டுமீல்.. பேய் மழை வெளுக்கப் போகுது! 5 மாவட்டங்களை லாக் செய்த மெட்! உங்க ஊரில் வாய்ப்பிருக்கா?
சென்னை: இன்று தமிழகத்தில், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும், தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் மாதத்திற்கு பிறகு வெயில் மழை என வானிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை வலுவிழந்திருக்கும் நிலையில், வடகிழக்கு பருவமழையால் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி வருகிறது.

அடுத்தடுத்து சென்னை உள்ளிட்ட கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கும் நிலையில், வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழக வானிலை
வடகிழக்கு பருவமழை தீவிரமாகும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கும் நிலையில் தற்போது மழையை எதிர்பார்த்து பொதுமக்கள் காத்திருக்கின்றனர். ஆனால் வழக்கத்தை விட வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. போதிய மழைப் பொழிவின்றி விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில நாட்களில் பருவமழை தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று தமிழகத்தில், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக இன்று தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
நாளை மறுநாள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி. திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வானிலை முன்னறிவிப்பு
13ஆம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
சென்னை வானிலை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 25-26* செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications