"மேஜிக் வானிலை.." நின்னு பெய்யும் கனமழை.. 90% மாவட்டங்களில் சம்பவம் காத்திருக்கு.. வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களிலும் நல்ல மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த காலமாகவே நல்ல மழை பெய்து வந்தது. இருப்பினும், தென் இந்தியாவில் மழை சற்று குறைவாகவே இருந்தது. கேரளாவில் பருவமழை சுமார் 50% குறைவாகப் பெய்தது.

தமிழ்நாட்டிலும் கூட பெரும்பாலான நாட்களில் மழை இல்லாமல் வறண்ட வானிலை தான் இருந்தது. வானிலை மைய இயக்குநரும் கூட தமிழ்நாட்டில் இயல்பைக் காட்டிலும் மழை குறைவாகவே பெய்ததாகக் கூறியிருந்தார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இந்தச் சூழலில் கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டில் வானிலை வெகுவாக மாறியுள்ளது. மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மழை கொட்டும் அளவுக்கும் இருக்கிறது.
இதற்கிடையே வரும் நாட்களில் அங்கே வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். தமிழ்நாட்டில் இன்று சுமார் 90% மாவட்டங்களில் மழை பெய்யும் எனக் குறிப்பிட்ட அவர், சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கியுள்ளார்.
மழை எங்கே: இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "கடந்த 2 நாட்கள் தமிழகத்தில் வானிலை மேஜிக் போலவே இருக்கிறது.. இன்றும் கூட சுமார் 90% மாவட்டங்களில் மழை பெய்யும்.. சில இடங்களில் மழை நின்று பெய்யும். திருச்சி, பெரம்பலூர், சேலம், அரியலூர், மதுரை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் நல்ல மழை பெய்கிறது.. தூத்துக்குடியிலும் விரைவில் மழை கொட்டும். இந்தப் பட்டியலில் விரைவில் சென்னையும் சேரும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக சென்னை வானிலை மையம் எந்த பகுதிகளில் மழை பெய்யும் என்பது குறித்த செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது. அதில் "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யும்.
வானிலை: அரியலூர், கடலூர், சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருச்சிராப்பள்ளி, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறப்பட்டிருந்தது.
நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதேபோல நாளை மறுநாள் ஆகஸ்ட் 2ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
தலைநகர் சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications