வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!
வேலூர்: வேலூரில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, நேற்று 102 டிகிரியை வெயில் தொட்டது. இன்றும் வெயில் 100 டிகிரியை எட்டியிருக்கிறது.
வேலூரை தவிர, கரூர் பரமத்தியிலும் வெயில் 100 டிகிரியை தொட்டிருக்கிறது. மொத்தமாக 2 நகரங்களில் வெயில் வெயில் இன்று 100 டிகிரியை கடந்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
- வேலூர் - 103.3°F
- ஈரோடு - 101.5°F
- மதுரை - 101.3°F
- திருச்சிராப்பள்ளி - 100.6°F
- சேலம் - 99.0°F
- தர்மபுரி - 98.6°F
- சென்னை - 94.8°F
- கோயம்புத்தூர் - 96.3°F
- கன்னியாகுமரி - 92.3°F
- கடலூர் - 92.5°F
என வெயில் பதிவாகியிருக்கிறது. முன்னதாக இன்று மதியம் வெளியான வானிலை அறிவிப்பில், இன்று கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நாளை நீலகிரி மாவட்டம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
குறிப்பாக இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications