பொங்கல் வரை மழை இருக்குமா? முக்கிய அப்டேட் கொடுத்த வெதர்மேன்! இந்த மாவட்ட மக்களுக்கு நிம்மதி
சென்னை: இந்த ஆண்டு, ஜனவரி மாதத்தில் இயல்பை விட கூடுதல் மழை பெய்திருக்கிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் மழை புரட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில் இந்த மழை பொங்கல் வரை நீடிக்குமா? என்பது குறித்து டெல்டா வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.
வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தமிழ்நாட்டில் பரவலாக மழையை கொடுத்து வருகிறது. ஜனவரி மாதத்தில் இயல்பான மழை அளவு வெறும் 7.2 மி.மீதான். ஆனால், 14.7 மி.மீ அளவுக்கு மழை கொட்டி தீர்த்திருக்கிறது. இது இயல்பை விட 104% அதிகமாகும்.

- சென்னை - 107%
- கோயம்புத்தூர் - 155%
- திண்டுக்கல் - 289%
- ஈரோடு - 160%
- கரூர் - 473%
- நாகப்பட்டினம் - 142%
- நீலகிரி - 844%
- புதுக்கோட்டை - 221%
- சேலம் - 164%
- தென்காசி - 639%
- தேனி - 299%
- திருநெல்வேலி - 424%
- திருப்பூர் - 143%
- திருச்சி - 248%
என மழை பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 68.9 மி.மீ மழை பதிவாகியிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் மழை எப்போது நிற்கும் என்பது குறித்து வெதர்மேன் கூறியுள்ளார்.
அதாவது இன்று மதியம் முதல் டெல்டா மாவட்டங்களில் (மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர்) மழை நின்றுவிடும் என்றும், இதன் பின்னர் மழை மழை தொடராது எனவும் கூறியுள்ளார்.
அதேபோல திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தென் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதுவே இந்த வாரத்தின் கடைசி மழையாகும். அதன் பின்னர் மழை இருக்காது என்று தனது சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications