கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்தது ஏன்? 3 சின்ன காரணம்.. 1 பெரிய காரணம்
சென்னை: கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23 இடங்களில் அதி கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 செ.மீ, விழுப்புரம் மாவட்டம் கெடாரில் 42 செ.மீ, தருமபுரி மாவட்டம் அரூரில் 33 செ.மீ, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருப்பாலபந்தலில் 32 செ.மீ, திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரில் 23 செ.மீ. மழை பதிவு பெய்துள்ளது.

மோசமான நிலைமை: தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாணி ஆற்றில் 20 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் ஊருக்குள் தண்ணீர் புகுந்து உள்ளது. கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூரில் குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வரும் மாநில பேரிட மீட்புப் படையினர் அங்கே மக்களை மீட்டு முகாமிற்கு அழைத்து சென்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் கோரத்தாண்டவம் ஆடி உள்ளது. திடீர்குப்பம், குண்டுசாலை, செம்மண்டலம், வெளிச்செம்மண்டலம், சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
3 சின்ன காரணம்: கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழைக்கு பின் முக்கியமான சில காரணங்கள் உள்ளன.
1. இந்த பெஞ்சல் புயல் வலிமை இழக்கவே நேரம் எடுத்தது. பொதுவாக ஒரு புயல் வலிமை இழக்க நேரம் எடுக்கிறது என்றால் அதில் தொடர்ந்து மேகங்கள் சேர்ந்து கொண்டே இருக்கிறது. அப்படி சேர்ந்து கொண்டே இருந்தால் அது அதிக மழையை கொடுக்க போகிறது என்று அர்த்தம்.
2. ஃபுல் எபெக்ட் என்று சொல்வார்கள். அதாவது ஒரு புயல் கரையை கடந்த பின்.. அதோடு கூடவே மேகங்களை கூட்டி வரும். இதனால் புயல் எந்த பாதையில் எல்லாம் செல்கிறதோ அந்த பாதையில் எல்லாம் மேகங்கள் மழையை கொடுக்கும்.
3. அதேபோல் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட சென்னை டூ பெங்களூர் ஸ்ட்ரெச் முழுக்க வானிலை இதற்கு சாதகமாக இருந்தது. எங்கேயும் மழை மேகங்களுக்கு எதிரான சூழல் இல்லை. வெப்பம் தொடங்கி, தரைக்காற்று வரை எல்லாமே நல்ல மழைக்கு சாதகமாக இருந்தது.
பெரிய காரணம்: இன்னொரு பெரிய காரணம்.. பெஞ்சல் வேகம். அது நகரவே இல்லை. 3 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் சில கிலோ மீட்டர்கள் நகர்ந்தது. அந்த வேகம் காரணமாக எங்கெல்லாம் நிற்கிறதோ அங்கெல்லாம் புயல் ஆட்டம் காட்டியது. அங்கெல்லாம் கடுமையான மழையை கொடுத்தது.
சென்னையில் கடந்த வருடம் இதே காரணத்தால்தான் வெள்ளம் வந்தது. அதே சம்பவம் இப்போது வட மாவட்டங்களில் நடந்துள்ளது. கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத வகையில் 50 செ.மீ. மழை பெய்யவும் அருகில் உள்ள மாவட்டங்களில் 30+ செமீ மழை பெய்யவும் இதுவே முக்கிய காரணம் ஆகும்.
-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீண்டும் தமிழகத்தில் வெளுக்க போகும் மழை.. தென் மாவட்டங்களுக்கு அலர்ட்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு!












Click it and Unblock the Notifications