Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை வெள்ளத்தை போல.. தென் மாவட்ட வெள்ளத்திற்கு ஏன் தன்னார்வலர்கள் திரளவில்லை? இப்படி ஒரு காரணமா?

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: 2015 மற்றும் 2023ல் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது களத்தில் இருந்த தன்னார்வலர்கள் அளவிற்கு கூட தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தன்னார்வலர்கள் களத்தில் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் ஒருவருடம் வரை பெய்ய வேண்டிய மழை.. ஒரே நாளில் பெய்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மொத்த தென் தமிழ்நாடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது.

தென் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ள நிலையிலும் கூட இங்கே நிவாரண பணிகளை செய்ய பிரபலங்கள் வரவில்லை. வடமாவட்ட மக்கள் பெரிதாக உதவி செய்ய முன் வரவில்லை, சென்னையில் இருந்து இளைஞர்கள் பெரிதாக களத்தில் இல்லை.

என்ஜிஓக்கள் பெரிதாக களத்திற்கு வரவில்லை. ஏன் எதிர்க்கட்சிகள் கூட இதை பெரிதாக களத்தில் இறங்கி பணிகளை செய்யவில்லை. சென்னைக்கு ஒன்று என்றால் தமிழ்நாடே ஓடி வருகிறது. ஆனால் தென் மாவட்டங்களுக்கு ஏன் மக்கள் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மனநிலைக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

 Why are there no volunteers for the South Tamil Nadu flood like Chennai flood in 2015 and 2023?

காரணங்கள்; மக்கள் பெரிதாக உதவி செய்யாததற்கு பின் பின்வரும் காரணங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட வெள்ளம் பற்றி சென்னையில் பெரும்பான்மை மக்களுக்கு தெரியவே 1 நாள் கடந்து விட்டது. சரியான வெள்ள நிலவரம் பற்றி தெரியவே நேரம் கடந்துவிட்டது.

2. பொதுவாக சென்னை போல இல்லாமல்.. தென் மாவட்ட இளைஞர்கள், மக்கள் சுயமாக களமிறங்கி பணிகளை செய்ய கூடியவர்கள். நிவாரண பணிகளுக்கு காத்திருக்காமல்.. கிராம மக்களே ஒன்று கூடி பணிகளை செய்ய கூடியவர்கள்.

3. அதேதான் இந்த முறையும் பல கிராமங்களில் மக்களே சுயமாக களமிறங்கி வீடு வீடாக நிவாரண பணிகளை செய்துள்ளனர். பல கிராமங்களில் ராணுவம் செல்ல முடியாத சூழ்நிலையில் கூட மக்கள் சுயமாக களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.

4. உதாரணமாக திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் 36 மணி நேரமாக உணவு, குடிநீர் இன்றி தவித்த பயணிகளுக்கு அருகில் இருந்த கிராமத்தினர் உணவு வழங்கியுள்ளனர். இங்கே ஹெலிகாப்டர் கூட உணவு வழங்க முடியாமல் கஷ்டப்பட்ட போது சுயமாக மக்கள் இறங்கி உதவி உள்ளனர்.

5. சென்னை உள்ளிட்ட வடமாவட்ட மக்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது என்பதையே கண்டுகொள்வது இல்லை. அங்கே என்ன நடந்தாலும் பெரிதாக கவலையும் படுவது இல்லை . இதன் காரணமாக அவர்கள் வெள்ள பாதிப்பில் நிவாரணம் வழங்குவது பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை.

6. சென்னையில் 2015ல் கிட்டத்தட்ட ஒரு வாரம் வெள்ளம் இருந்தது. 1 வாரம் மக்கள் உதவி இன்றி தவித்தனர். தினமும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு திணறி வந்தனர். சென்னையில் அப்போது ஏற்பட்ட நிலைமை இப்போது தென் மாவட்டங்களில் இல்லை என்ற உணர்வு மக்களிடையே உள்ளது.

7. 2015ல் முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களில் தன்னார்வலர்கள் சேர்ந்து உதவிகளை செய்தனர். ஆனால் இந்த முறை 2015 அளவிற்கு உதவிகள் கேட்கப்படவில்லை. உதவிகள் கேட்கப்பட்டாலும் அதை அமைச்சர்கள், நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு தீர்த்து வருகின்றனர். அரசே நேரடியாக இவர்களிடம் உதவிகளை செய்தது. இதனால் தன்னார்வலர்கள் தேவை குறைவாக உள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+