பெங்களூர் எல்லாம் ஓரம்போ.. இதான் சென்னை.. நேற்று நாள் முழுக்க நடந்த விசித்திரம்.. விக்கித்த மக்கள்
சென்னை: சென்னையில் 3 வாரங்களுக்கு முன்புதான் புயல், வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் சுவடே இன்னும் முடியாத நிலையில் நேற்று மக்களை வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று சென்னையில் நடந்தது.
சென்னையில் 3 வாரங்களுக்கு முன் மிக கனமழை, வெள்ளம் ஏற்பட்டது. 2015ஐ விட வரலாறு காணாத மழை, மக்களை அப்படியே உலுக்கி போட்ட வெள்ளம் என்று மொத்தமாக சென்னையே மூழ்கியது. ஆனால் வடிகால் வசதிகள் காரணமாக 2 நாட்களில் சென்னை அப்படியே மீண்டு எழுந்தது.

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
நேற்று நடந்த சம்பவம்: சென்னையில் 3 வாரங்களுக்கு முன்புதான் புயல், வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் சுவடே இன்னும் முடியாத நிலையில் நேற்று மக்களை வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று சென்னையில் நடந்தது.
நேற்று சென்னையில் நாள் முழுக்க சராசரியாக 24- 25 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. அதோடு கடுமையான பனி மூட்டம், மேகமூட்டம் நிலவியது. நாள் முழுக்க சூரியன் வெளியே வரவே இல்லை. இரவிலும் இதே வானிலை நீடித்தது. இரவில் வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு கூட குறைந்தது. சென்னையில் நாள் முழுக்க வெப்பம் இல்லை, கடும் சூடு இல்லை, மழை இல்லை.. அதேபோல் humidityம் மிக குறைவாக இருந்தது.
இதனால் நாள் முழுக்க சென்னையில் மலை பிரதேசங்களில் நிலவுவது போன்ற வானிலை நிலவியது. சென்னையில் இந்த வருடத்தில் சிறப்பான வானிலை இது என்று சொல்லும் அளவிற்கு வானிலை நிலவியது. பெங்களூரில்தான் பொதுவாக இது போன்ற வானிலை நிலவும். ஆனால் அதே வானிலை நேற்று நாள் முழுக்க சென்னையில் நிலவியது.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications