பெங்களூர் எல்லாம் ஓரம்போ.. இதான் சென்னை.. நேற்று நாள் முழுக்க நடந்த விசித்திரம்.. விக்கித்த மக்கள்
சென்னை: சென்னையில் 3 வாரங்களுக்கு முன்புதான் புயல், வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் சுவடே இன்னும் முடியாத நிலையில் நேற்று மக்களை வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று சென்னையில் நடந்தது.
சென்னையில் 3 வாரங்களுக்கு முன் மிக கனமழை, வெள்ளம் ஏற்பட்டது. 2015ஐ விட வரலாறு காணாத மழை, மக்களை அப்படியே உலுக்கி போட்ட வெள்ளம் என்று மொத்தமாக சென்னையே மூழ்கியது. ஆனால் வடிகால் வசதிகள் காரணமாக 2 நாட்களில் சென்னை அப்படியே மீண்டு எழுந்தது.

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
நேற்று நடந்த சம்பவம்: சென்னையில் 3 வாரங்களுக்கு முன்புதான் புயல், வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் சுவடே இன்னும் முடியாத நிலையில் நேற்று மக்களை வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று சென்னையில் நடந்தது.
நேற்று சென்னையில் நாள் முழுக்க சராசரியாக 24- 25 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. அதோடு கடுமையான பனி மூட்டம், மேகமூட்டம் நிலவியது. நாள் முழுக்க சூரியன் வெளியே வரவே இல்லை. இரவிலும் இதே வானிலை நீடித்தது. இரவில் வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு கூட குறைந்தது. சென்னையில் நாள் முழுக்க வெப்பம் இல்லை, கடும் சூடு இல்லை, மழை இல்லை.. அதேபோல் humidityம் மிக குறைவாக இருந்தது.
இதனால் நாள் முழுக்க சென்னையில் மலை பிரதேசங்களில் நிலவுவது போன்ற வானிலை நிலவியது. சென்னையில் இந்த வருடத்தில் சிறப்பான வானிலை இது என்று சொல்லும் அளவிற்கு வானிலை நிலவியது. பெங்களூரில்தான் பொதுவாக இது போன்ற வானிலை நிலவும். ஆனால் அதே வானிலை நேற்று நாள் முழுக்க சென்னையில் நிலவியது.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications