சென்னையில் விடாத மழை.. திடீரென மக்களுக்கு மாநகராட்சி அனுப்பிய எஸ்எம்எஸ்! வந்தது வார்னிங்.. முக்கியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலருக்கும் போனில் முக்கியமான மெசேஜ் ஒன்று வந்துள்ளது.

சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ, மழை பெய்துள்ளது. கொளத்தூர் - 15 செ.மீ, மழை பெய்துள்ளது. திருவிக நகர் 15.4 செ.மீ மழை பெய்துள்ளது. அம்பத்தூர் - 14 செ.மீ மழை பெய்துள்ளது. மலர் காலனி - 13 செ.மீ மழை பெய்துள்ளது.

Why did Chennai Corporation send an important message to people through SMS amid the heavy rain?

செம்பரம்பாக்கம் நிலை: இந்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி சமீபத்திய நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று காலை விநாடிக்கு 1,100 கன அடியாக இருந்த நீர்வரத்து தொடர் மழை காரணமாக 2,888 கன அடியாக உயர்ந்து உள்ளது.

ஏரியில் இருந்து தற்போது வரை விநாடிக்கு 6000 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. 24 அடி கொண்ட ஏரியில் நீர் மட்டம் 22.41 அடியை எட்டியுள்ளது.

புழல் ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. சென்னை அடுத்த புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்:

▪️ செம்பரம்பாக்கம் - 89.33%
▪️புழல் - 93.15%
▪️பூண்டி - 64.44%
▪️சோழவரம் - 78.72%
▪️கண்ணன்கோட்டை - 93% உள்ளது.

சென்னை மக்களுக்கு வந்த மெசேஜ்; சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலருக்கும் போனிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதன்படி செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 30.11.23, 8am விநாடிக்கு 6000கனஅடிநீர் வெளியேறுவதால் அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று மெசேஜ் வந்துள்ளது.

சென்னை மக்களுக்கு வந்த மெசேஜ்; சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலருக்கும் போனில் முக்கியமான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதன்படி செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 30.11.23, 8am விநாடிக்கு 6000கனஅடிநீர் வெளியேறுவதால் அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று மெசேஜ் வந்துள்ளது.

அது போன்ற விஷயங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக முறையாக மக்களுக்கு மெசேஜ் அனுப்பி சென்னையில் செம்பரம்பாக்கம் உள்ள ஏரிகளின் நிலை அப்டேட் செய்யப்படுகிறது.

வானிலை நிலவரம்: கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக மழை பெய்தது. மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மழை: நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+