Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலக்கரி பற்றாக்குறை- மின்வெட்டு அபாயம் வருமா? கடும் பாதிப்பை எதிர்கொள்ளும் மாநிலங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் அனல்மின் நிலையங்களுக்கான நிலக்கரி பற்றாக்குறை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் நாடு முழுவதும் மின்சார உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து பல மாநிலங்களும் பல மணிநேர மின்வெட்டை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.

நிலக்கரி பற்றாக்குறைக்கான காரணங்களும் விளைவுகளும்

- கொரோனா பாதிப்புக்குப் பின் பொருளாதார மீட்சியை நோக்கி பெரும்பாலான துறைகள் இயங்க தொடங்கிவிட்டன. உற்பத்தி துறை உள்ளிட்ட பல தொழில் துறைகள் முழு வீச்சில் செயல்பட்டு வருவதால் நாட்டில் மின்சார தேவை அதிகரித்துள்ளது.

What is Coal Crisis? States may face power cut

- குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி மற்றும் தமிழகத்தில் கனமழை காரணமாக கையிருப்பில் உள்ள நிலக்கரி விநியோகம் குறைந்து போனது.

- சர்வதேச சந்தையில் நிலக்கரியின் விலை அதிகரித்ததால் நிலக்கரி இறக்குமதியானது 40% குறைந்து போய்விட்டது.

- கடந்த மார்ச் மாதம் சர்வதேச சந்தையில் 1 டன் நிலக்கரி விலை 60 டாலராக இருந்தது. ஆனால் செப்டம்பர்- அக்டோபரில் 1 டன் நிலக்கரி விலை 160 டாலடராக உயர்ந்திருப்பது நிலைமையை மோசமாக்கி உள்ளது.

- எரிவாயு விலை அதிகரித்திருப்பதால் எரிவாயு மூலமான மின்உற்பத்தி குறைந்துள்ளது.

- அணுமின் நிலையங்கள் பராமரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மூடப்பட்டதால் மின் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் நிலக்கரி மூலமான மின் உற்பத்தியின் தேவை அதிகரித்துள்ளது.

- நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நாடு முழுவதும் மொத்தம் 135 அனல்மின் நிலையங்கள் பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளன.

- நாட்டின் 16 அனல்மின்நிலையங்களில் நிலக்கரி கையிருப்பில் இல்லை; 45 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு ஓரிருநாட்களுக்கு மட்டுமே இருக்கிறது.

நிலக்கரி தட்டுப்பாடும் மின்உற்பத்தி பாதிப்பும்

- மத்திய மின்சார ஆணையம் கடந்த 7-ந் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, 16 அனல்மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு கிடையாது. இந்த 16 அனல்மின் நிலையங்கள் மூலமாக 16,880 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

- 30-க்கும் மேற்பட்ட அனல்மின்நிலையங்களில் கையிருப்பு ஒரே ஒருநாள் இருக்கிறது. இந்த 30 அனல்மின் நிலையங்கள் மூலம் செய்யப்பட்டு வந்த மின் உற்பத்தி 37,345 மெகாவாட்.

- 18 அனல் மின்நிலையங்களில் 2 நாட்களுக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு. இந்த அனல்மின் நிலையங்களில் மொத்தம் 23.450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

மத்திய அரசு சொல்வதும் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும்

- நாட்டின் 80% அனல்மின்நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையை எதிர்கொண்டிருக்கிறது என்கிறது மத்திய அரசு.

- தற்போதைய நிலக்கரி கையிருப்பு சில நாட்களுக்கு மட்டுமே இருக்கும் என்கிறது மத்திய அரசு

- கனமழையும், சர்வதேச சந்தையின் நிலக்கரியின் விலை உயர்வும்தான் நிலக்கரி விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது; 3 நாட்களில் இது சீரமைக்கப்படும் என மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

- நிலக்கரி பற்றாக்குறையை முன்வைத்து மின்வெட்டு குறித்து தேவையற்ற பீதியை உருவாக்கக் கூடாது என மத்திய மின்சாரத்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் எச்சரித்துள்ளார்.

- நிலக்கரி பற்றாக்குறை, மின்வெட்டு அபாயம் குறித்து மத்திய அமைச்சர்கள் ஆர்.கே.சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சுமார் 4 மணிநேரம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

- நிலக்கரி தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மின்வெட்டு அபாயம்- மாநிலங்களில் என்ன நிலைமை?

- பீகாரில் நிலக்கரி பற்றாக்குறை இருக்கிறது என்பது உண்மைதான். பொதுவாக தேசிய அனல்மின் கழகம் அல்லது தனியாரிடம் இருந்து நிலக்கரி பெறுவது வழக்கம். தற்போது அது பாதிக்கப்பட்டிருக்கிறது- பீகார் முதல்வர் நிதிஷ்குமார்

- கேரளாவில் அக்டோபர் 19-ந் தேதிக்குப் பின்னர் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 100 மெகாவாட் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது; இதனை சரிசெய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன- கேரளா அமைச்சர் கே.கிருஷ்ணகுட்டி

- டெல்லியில் மின்தட்டுப்பாடு அபாயம் உருவாகி உள்ளது தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கடிதம் அனுப்பியுள்ளார். டெல்லிக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் டாடா பவர் நிறுவனம், நிலக்கரி கையிருப்பு ஓரிரு நாட்களுக்குதான் இருக்கும்; அதனால் மின்வெட்டு அபாயம் ஏற்படும் என எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

- தமிழகத்தில் சில நாட்களுக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். இருப்பினும் பராமரிப்பு பணிகளுக்கு தலைநகர் சென்னையில் மின்வெட்டு அமல்படுத்தப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

- பஞ்சாப் மாநிலத்தில் 3 அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் ஒருநாளைக்கு 3 மணிநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளது.

- கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் பல்வேறு இடங்களில் இன்று முழுவதும் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது; எந்தெந்த பகுதிகளில் எப்போது மின்வெட்டு அமலில் இருக்கும் எனவும் விரிவாகவும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- பீகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுமார் 14 மணிநேர மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

- மகாராஷ்டிராவில் 13 அனல்மின் நிலையங்கள் நிலக்கரி பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளன. மேலும் மகாராஷ்டிராவிலும் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.

Recommended Video

    விஸ்வரூபம் எடுக்கும் நிலக்கரி விவகாரம்.. 20 அனல்மின் நிலையங்கள் மூடல்?

    - உ.பி.யில் மின்சார பற்றாக்குறையை எதிர்கொள்வது தொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார். இதேபோல் கேரளா முதல்வர் பினராயி விஜயனும் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+