ஓ பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்கியது மன்னார்குடி கோஷ்டி?
முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் கடித்தை ஓ பன்னீர்செல்வம் கொடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. போயஸ் கார்டனில் சசிகலாவிடம் தம்முடைய ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ் கொடுத்தாராம்.
சென்னை: முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து ராஜினாமா கடிதத்தை நெருக்கடி கொடுத்து வாங்கிவிட்டது மன்னார்குடி கோஷ்டி என்கிறது அதிமுக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து தாமே முதல்வராக விரும்பினார் சசிகலா. ஆனால் மத்திய அரசு இதற்கு முட்டுக்கட்டை போட்டு அமைச்சரவையில் 2-வது இடத்தில் இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை முதல்வராக்கியது.

பொதுச்செயலர் பதவி
இதை சசிகலா உட்பட மன்னார்குடி கோஷ்டியால் ஜீரணிக்க முடியவில்லை. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக 25 நாட்கள் நாடகத்தை அரங்கேற்றி அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றினார் சசிகலா.

கலகக் குரல்
அதிமுக பொதுச்செயலர் பதவியைக் கைப்பற்றிய உடனேயே மீண்டும் முதல்வர் பதவிக்கு குறிவைத்தது மன்னார்குடி கோஷ்டி. அமைச்சர்கள் மூலமாக போர்க்கொடி தூக்க வைத்தனர். உச்சகட்டமாக லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும் பன்னீர்செல்வத்துக்கு எதிராக கலகக் குரல் எழுப்பினார்.

ராஜினாமா கடிதம்
நிலைமை மிகமோசமான நிலையில் எந்த காரணத்தை முன்னிட்டும் ராஜினாமா செய்ய வேண்டாம் என மத்திய அரசு ஓ பன்னீர்செல்வத்துக்கு அறிவுறுத்தல் விடுத்தது. ஆனால் போயஸ் கார்டனில் நேற்று நடைபெற்ற ஆலோசனைகளின் போது பன்னீர்செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து ராஜினாமா கடிதத்தை வாங்கிவிட்டதாம் மன்னார்குடி கோஷ்டி.

ஜனவரி 10 அல்லது 12-ல் பதவியேற்பு
நாளை முதல் மாவட்ட வாரியான அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை என்ற நாடகம் நடைபெற உள்ளது. வரும் 9-ந் தேதி வரை நடைபெற உள்ளது இந்த நாடகம். இதற்குப் பின்னர் ஜனவரி 10 அல்லது 12-ந் தேதியன்று சசிகலா முதல்வராக பொறுப்பேற்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றன அதிமுக வட்டாரங்கள்.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications