தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி
சென்னை: கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அரசு தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்தவர்களுக்கு, தற்போது 300 சதவீதத்திற்கும் மேல் (அதாவது 3 மடங்கு) பம்பர் லாபம் கிடைத்துள்ளது. இந்த குறிப்பிட்ட தொடர் பத்திரங்களை, காலத்திற்கு முன்பாகவே திரும்பப் பெற்றுக் கொள்வதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ₹3,745 ஆக இருந்தது. தற்போது இந்த பத்திரங்களைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விலை ஒரு கிராமுக்கு ₹15,275 ஆகும். இதன் மூலம் மிகப்பெரிய லாபம் கிடைத்துள்ளது. அதாவது தங்கப்பத்திரத்தில் ₹1.47 கோடி முதலீடு செய்தவர்களுக்கு து ₹6.11 கோடியாக மாறியிருக்கிறது. வட்டித் தொகையையும் சேர்த்தால், வெறும் 6 ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்துள்ள ஒட்டுமொத்த நிகர லாபம் மட்டும் சுமார் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் ஆகும்.
2019-20 ஆம் ஆண்டின் 'சீரிஸ்-7' (Series-VII) என்ற அரசு தங்கப் பத்திரம். இது 2019 டிசம்பர் 10 அன்று வெளியிடப்பட்டது. அன்றைக்கு ஒரு கிராம் தங்கப் பத்திரத்தின் விலை ₹3,745 ஆக இருந்தது. (ஆன்லைனில் வாங்கியவர்களுக்கு ₹50 தள்ளுபடியுடன் ₹3,695). இன்றைய மீட்பு விலை (2026, ஜூன் 10) மிகப்பெரிய ஆச்சரியமானது. தற்போது இந்த பத்திரங்களைத் திரும்பப் பெற ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள விலை ஒரு கிராமுக்கு ₹15,275 ஆகும்! இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 307.87% லாபம் கிடைத்துள்ளது. ஆன்லைன் தள்ளுபடி விலையோடு கணக்கிட்டால் இந்த லாபம் 313.39% ஆக உயர்கிறது.

இந்த 300% லாபம் என்பது தங்கத்தின் விலை உயர்வால் கிடைத்தது மட்டுமே. இதுதவிர, கடந்த 6 ஆண்டுகளாக முதலீட்டாளர்களின் வங்கிக் கணக்கில் அரசு செலுத்திய 2.5% வருடாந்திர வட்டித் தொகை தனி தொகை ஆகும்.
2019-20 நிதியாண்டில் கொண்டு வரப்பட்ட இந்த சீரிஸ்-7 திட்டத்தில், ஒரு தனிநபர் முதலீட்டாளர் தனது பெயரில் அதிகபட்சமாக 4,000 கிராம் தங்கப் பத்திரங்களை வாங்கியிருக்க முடியும்.
அதிகபட்சமாக எவ்வளவு லாபம் கிடைத்திருக்கும்?
ஒரு முதலீட்டாளர் 2019-இல் ஆன்லைன் மூலம் ₹50 தள்ளுபடி பெற்று, அதிகபட்ச வரம்பான 4,000 கிராம் தங்கத்தை வாங்கியிருந்தார் என்று வைத்துக்கொள்வோம். அவருக்கான அசல் முதலீடு மற்றும் தற்போதைய லாபக் கணக்கு :
அசல் முதலீடு (2019-இல்):1 கிராம் தங்கம் விலை (ஆன்லைன் தள்ளுபடியுடன்): ₹3,6954,000
கிராமிற்கான மொத்த முதலீடு: (1 கோடியே 47 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்
இன்றைய மொத்த மதிப்பு (2026, ஜூன் 10-இல்):1 கிராம் தங்கத்தின் இன்றைய மீட்பு விலை: ₹15,2754,000
கிராமிற்கான இன்றைய மொத்த மதிப்பு: 6 கோடியே 11 லட்சம் ரூபாய்).
தங்கம் விலை உயர்வால் கிடைத்த லாபம் மட்டும் (313.39%): = ₹4,63,20,000 (4 கோடியே 63 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்).
இதோடு சேரும் கூடுதல் வட்டி வருமானம் (வங்கி கணக்கிற்கு வந்தது):பத்திரத்தை வைத்திருந்த கடந்த 6 ஆண்டுகளில், அசல் முதலீட்டுத் தொகையான ₹1,49,80,000-க்கு (தள்ளுபடிக்கு முந்தைய அசல் விலை ₹3,745-ன் படி) ஆண்டுக்கு 2.5% வட்டி வீதம் அரசு தனித்தொகையாக வழங்கியுள்ளது.ஒரு வருடத்திற்கான வட்டி (2.5%): ₹3,74,5006 வருடங்களுக்கான மொத்த வட்டி வருமானம்: ₹22,47,000 (22 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய்).
2019 டிசம்பரில் அதிகபட்ச வரம்பான 4 கிலோ தங்கத்தை ₹1.47 கோடி முதலீடு செய்து வாங்கிய ஒருவருக்கு, இன்று அது ₹6.11 கோடியாக மாறியிருக்கும். வட்டித் தொகையையும் சேர்த்தால், வெறும் 6 ஆண்டுகளில் அவருக்குக் கிடைத்துள்ள ஒட்டுமொத்த நிகர லாபம் மட்டும் ₹4,85,67,000 (சுமார் 4 கோடியே 85 லட்சம் ரூபாய்) ஆகும்!
விலை எப்படி கணக்கிடப்பட்டது?
அரசு தங்கப் பத்திரங்களின் விதிமுறைப்படி, பத்திரத்தை முடிக்கும் தேதிக்கு முந்தைய 3 வேலை நாட்களின் (ஜூன் 5, ஜூன் 8 மற்றும் ஜூன் 9, 2026) தங்கத்தின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு, இந்த ₹15,275 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு 'இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன்' (IBJA) வெளியிட்ட விலையே கணக்கில் கொள்ளப்பட்டது.
காலாவதி ஆகும் முன்பே பணத்தை எடுக்க முடியுமா?
பொதுவாக அரசு தங்கப் பத்திரங்களின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள் ஆகும். ஆனால், இதில் ஒரு சலுகை உள்ளது; பத்திரம் வெளியாகி 5 ஆண்டுகள் முடிந்த பிறகு, வட்டி வழங்கப்படும் தேதிகளில் முதலீட்டாளர்கள் தங்களுக்குத் தேவைப்பட்டால் காலத்திற்கு முன்பாகவே (Premature Redemption) பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அந்த விதியின்படிதான் தற்போது 2019-ஆம் ஆண்டு பத்திரங்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது.
இந்த லாபத்திற்கு வருமான வரி உண்டா?
வட்டிக்கு வரி உண்டு: இந்த பத்திரங்கள் மூலம் ஆண்டுக்கு இருமுறை உங்களுக்குக் கிடைக்கும் 2.5% வட்டித் தொகைக்கு, உங்களது தனிநபர் வருமான வரி விதிகளின்படி வரி செலுத்த வேண்டும்.
லாபத்திற்கு வரி இல்லை: ஆனால், தங்கம் விலை உயர்ந்ததால் உங்களுக்குக் கிடைத்துள்ள இந்த 300% 'மூலதன லாபத்திற்கு' (Capital Gains Tax) முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த லாபத்திற்கு நீங்கள் ஒரு ரூபாய் கூட வரி கட்டத் தேவையில்லை.
இந்தத் திட்டம் இப்போது ஏன் நிறுத்தப்பட்டது?
மக்கள் கடைகளில் போய் வாங்குவதைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து இந்தியா கச்சாத் தங்கம் இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தவுமே 2015-இல் மோடி அரசாங்கம் இந்த 'டிஜிட்டல் தங்கப் பத்திரம்' திட்டத்தைக் கொண்டு வந்தது.
ஏன் நிறுத்தப்பட்டது?
இந்தத் திட்டம் அதன் நோக்கங்களை ஓரளவுக்கு எட்டிவிட்டதாலும், இந்தப் பத்திரங்களை நிர்வகிப்பதற்கும் மக்களுக்கு வட்டி மற்றும் லாபம் வழங்குவதற்கும் அரசுக்கு ஆகும் செலவு மிக அதிகமாகிவிட்டதாலும், கடந்த 2023 அக்டோபர் மாதத்துடன் புதிய தங்கப் பத்திரங்கள் வெளியிடுவதை அரசு நிறுத்திவிட்டது.
தற்போதைய முதலீட்டாளர்கள் Gold ETF மற்றும் டிஜிட்டல் கோல்டு போன்ற பிற வழிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் இது நிறுத்தப்பட்டது. இருப்பினும், ஏற்கனவே பத்திரங்களை வைத்துள்ள பழைய முதலீட்டாளர்களுக்கு இந்த விதிகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் வழக்கம் போல் பொருந்தும்.












Click it and Unblock the Notifications